‘பியார் பிரேமா கல்யாணம்’ விமர்சனம்: திருமணத்தில் ஆணும் பெண்ணும் ஏன் ஒரே மாதிரி இருக்கக்கூடாது?
ராகேஷ் தாரா August 22, 2026 08:44 PM

இயக்குநர் இளன் இயக்கத்தில் உருவாகியுள்ளபியார் பிரேமா கல்யாணம்திரைப்படத்தில் இளன், சான்வே மெகன்னா, ராதிகா சரத்குமார், எம்.எஸ். பாஸ்கர், யோகி பாபு, கீதா கைலாசம் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ‘பியார் பிரேமா காதல்’, ‘ஸ்டார்படங்களை இயக்கிய இளன், இப்படத்தின் மூலம் நடிகராகவும் அறிமுகமாகியுள்ளார். 2 மணி நேரம் 6 நிமிடங்கள் ஓடும் இப்படம், ஆகஸ்ட் 21ஆம் தேதி நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் நேரடியாக வெளியாகியுள்ளது.

பியார் பிரேமா கல்யாணம் கதை

படத்தின் கதை திருமணத்திற்குப் பிறகு ஒரு பெண் தனது வீட்டை விட்டு கணவரின் வீட்டிற்குச் செல்வதுதான் வழக்கமான நடைமுறை என்ற எண்ணத்தை கேள்விக்குள்ளாக்குகிறது. துபாயிலிருந்து சொந்த ஊருக்குத் திரும்பும் இளைஞனான இளன், திருமணத்துக்குப் பிறகு தனது மனைவி பவியுடன் புதிய வாழ்க்கையை தொடங்குகிறான். சமூக வலைதளங்களில் பிரபலமாக இருக்கும் பவி, தனது குடும்பத்துடன் இருக்கும் வீட்டை விட்டு வெளியேற விரும்பவில்லை. அதனால் திருமணத்திற்குப் பிறகு கணவனான இளனே மனைவியின் வீட்டில் சென்று வசிக்கிறார். இதிலிருந்து தொடங்குகிறது படத்தின் முக்கியமான பிரச்சினையும் நகைச்சுவையும்.

விமர்சனம் 

மனைவியின் வீட்டில் வசிக்கும் ஆணாக இளன் எதிர்கொள்ளும் சூழல்கள் படத்தின் பெரும்பாலான நகைச்சுவைக்கு காரணமாகின்றன. வீட்டுப் பொறுப்புகள், உறவினர்களின் எதிர்பார்ப்புகள், வேலை தொடர்பான கேள்விகள் என இதுவரை பெரும்பாலும் பெண்கள் எதிர்கொள்ளும் சூழல்களை ஆண் கதாபாத்திரத்தின் வழியாக படம் காட்டுகிறது. இதன் மூலம் திருமணத்திற்குப் பிறகு பெண் தனது வீட்டை விட்டு செல்வது ஏன் இயல்பானதாக கருதப்படுகிறது என்ற கேள்வியை படம் முன்வைக்கிறது.

இந்த மையக்கருத்து படத்தின் மிகப்பெரிய பலமாக இருக்கிறது. பழக்கமான குடும்ப அமைப்பை தலைகீழாக மாற்றிப் பார்ப்பதால் உருவாகும் சிறிய சிறிய சங்கடங்கள் நல்ல நகைச்சுவையை உருவாக்குகின்றன. இளன் கதாபாத்திரம் தொடக்கத்தில் பொறுப்புகள் மீது அதிக அக்கறையில்லாதவராக இருந்தாலும், புதிய சூழலில் மெல்ல மாறத் தொடங்குவது கதைக்கு உணர்வுப்பூர்வமான பரிமாணத்தை கொடுக்கிறது. சான்வே மெகன்னா, பவியாக தனது தனிப்பட்ட விருப்பங்களையும் குடும்பத்தின் மீதான பாசத்தையும் இயல்பாக வெளிப்படுத்தியுள்ளார். இருவருக்கும் இடையிலான கெமிஸ்ட்ரியும் படத்தின் பலமாக அமைந்துள்ளது.

ராதிகா சரத்குமார், பவியின் தாயாக சிறப்பாக நடித்துள்ளார். எம்.எஸ். பாஸ்கர், யோகி பாபு உள்ளிட்ட துணை நடிகர்களும் குடும்பச் சூழலுக்கு தேவையான நகைச்சுவையை வழங்குகின்றனர். யுவன் சங்கர் ராஜாவின் இசை காதல் மற்றும் உணர்வுப்பூர்வமான காட்சிகளுக்கு கூடுதல் பலம் சேர்க்கிறது.

ஆனால் படத்தின் மையக்கருத்து எவ்வளவு சுவாரஸ்யமாக இருக்கிறதோ, அதற்கான திரைக்கதை தீர்வு அதே அளவுக்கு வலுவாக இல்லை . குறிப்பாக பாலின சமத்துவம் குறித்த முக்கியமான கேள்வியை எழுப்பும் படம், இறுதியில் அந்த விவாதத்தை முழுமையாக முன்னெடுக்காமல் பாதுகாப்பான முடிவை நோக்கிச் செல்வதாக தோன்றுகிறது

அதேபோல், சில காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகும் வகையிலான உள்ளடக்கத்தை உருவாக்கும் நோக்கத்துடன் அமைக்கப்பட்டிருப்பது போல் தெரிகிறது, இதனால் சுவாரஸ்யமான மையக்கருத்தின் ஆழம் குறைகிறது. இருந்தாலும், படத்தின் முதல் பாதியில் வரும் குடும்ப நகைச்சுவை மற்றும் திருமண வாழ்க்கையை தலைகீழான கோணத்தில் பார்ப்பது போன்ற அம்சங்கள் ரசிக்க வைக்கின்றன.

மொத்தத்தில், ‘பியார் பிரேமா கல்யாணம்திருமணம் குறித்த வழக்கமான எதிர்பார்ப்புகளை மாற்றிப் பார்க்க முயற்சிக்கும் எளிமையான ரொமாண்டிக் காமெடி. அதன் மையக்கருத்து புதுமையாகவும் விவாதத்திற்குரியதாகவும் இருக்கிறது. ஆனால் அந்தக் கருத்தை இன்னும் ஆழமாக எடுத்துச் சென்றிருந்தால் படம் அதிக தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும்.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.