தங்கத்தின் விலையானது கடந்த ஆண்டு இறுதியில் ஒரு லட்சத்தை தாண்டிய நிலையில், இந்தாண்டு 2 லட்சத்தை எட்டும் என நகை வியாபாரிகள் கணித்திருந்தனர். அதற்கு ஏற்ப 2026ஆம் ஆண்டு தொடக்கத்தில் ஒரு சவரன் 1.34 லட்சத்தை எட்டியது. ஆனால் அடுத்த சில வாரங்களில் தங்கத்தின் விலையானது அதிரடியாக குறைய தொடங்கியது. ஒரு சவரன் ஒரு லட்சம் ரூபாய் என்ற அளவிற்கு விற்பனை செய்யப்பட்டது. இதற்கு முக்கிய காரணமாக அமெரிக்கா- ஈரான் போரால் முதலீட்டாளர்கள் தங்கத்திற்கு பதிலாக கச்சா எண்ணெய் மீது தங்களது பார்வையை திருப்பியது முக்கிய திருப்பமாக பார்க்கப்பட்டது. இதனால் தங்கத்தின் விலையானது பெரிய அளவில் உயராமல் இருந்து வந்தது.
இந்த நிலையில் அமெரிக்கா- ஈரான் இடையே போர் தற்போது ஓய்ந்திருக்கும் நிலையில் முதலீட்டாளர்கள் தங்கத்தின் மீது முதலீட்டை அதிகரித்துள்ளனர். மேலும் பொருளாதார மாற்றத்தின் காரணமாக பங்கு சந்தையில் முதலீடு செய்வதற்கு பதிலாக தங்கத்தின் மீதான முதலீடு பாதுகாப்பானது என கருதுவதால் தங்கத்தின் மீது அதிகளவு முதலீடு செய்து வருவதும் தங்கம் விலை உயர காரணமாக கூறப்படுகிறது.
தங்கத்தின் விலையானது கடந்த சில வாரங்களாக தொடர்ந்து உயர்ந்து வந்த நிலையில், நேற்று திடீரென சற்று குறைந்து நகைப்பிரியர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. இந்த நிலையில் இன்று தங்கத்தின் விலையானது எந்த வித மாற்றமும் இல்லாமல் நேற்றைய விலையான கிராம் ஒன்று 15,010 ரூபாய்க்கும், சவரன் 1,20.080 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
நேற்று வெள்ளி விலையானது கிலோவிற்கு 10 ஆயிரம் ரூபாய் குறைந்த நிலையில், இன்று வெள்ளியின் விலையானது எந்தவித மாற்றமும் இல்லாமல் கிராம் 265 ரூபாய்க்கும், கிலோ பார் வெள்ளி 2 லட்சத்து 65 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.