தமிழ்நாடு: குறைந்தபட்ச உச்சபட்ச பற்றாக்குறை (சுமார் 4.41%) பதிவாகியுள்ளது. உள்ளூர் இடையூறுகள் மற்றும் பராமரிப்புப் பணிகள் காரணமாக திட்டமிடப்பட்ட பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டாலும், மாநிலத்தின் ஒட்டுமொத்த மின் விநியோகம் போதுமானதாக உள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆனால் கிராமப்பகுதிகளில் இரவு நேரங்களில் ஏற்படும் மின்வெட்டு பொதுமக்களை கொதிப்படைய செய்துள்ளது.
தேவை உயர்வு, மழை குறைவு, பழைய கட்டமைப்பு மற்றும் சந்தைப் பற்றாக்குறை காரணமாக ஏற்பட்டுள்ள மின்வெட்டு தொடர்பாக அரசு விளக்க வேண்டும் என சமூக வலைதளங்களில் பலரும் கேள்வி எழுப்பி வந்தனர். அதற்கு பதிலளித்துள்ள அமைச்சர் நிர்மல்குமார், “காற்றாலை மின்சாரம் தடைபட்டதால் இரண்டு நாட்கள் மின்சாரம் தட்டுப்பாடு ஏற்பட்டது. இது தமிழகத்தில் மட்டுமல்ல பெரும்பாலான மாநிலங்களில் நிலவும் தட்டுப்பாடு. நேற்று மாலை தமிழகத்திற்கு தேவையான மின்சாரம் பொது விநியோகத்தில் இருந்து கொள்முதல் செய்யப்பட்டது.
நேற்று மாலை முதல் அனைத்து இடங்களிலும் சீரான மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. இது தமிழகத்தில் மட்டுமல்ல பெரும்பாலான மாநிலங்களில் நிலவும் தட்டுப்பாடு தமிழகத்தில் நேற்று மாலை முதல் போதுமான மின்சாரம் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது என்பதை தெரிவித்து கொள்கிறோம்”என அமைச்சர் நிர்மல்குமார் விளக்கமளித்துள்ளார்.