பொதுவாக ஒரு மனிதன் தூங்கும்போது அறிந்த இதயம் ஓய்வெடுக்கும் .ஆனால் குறட்டை விடுவோரின் இதயம் அப்போதும் துடிப்பதால் சீக்கிரம் மாரடைப்பு ஏற்பட வாய்ப்புள்ளது .
மேலும் இந்த குறட்டை விடுவோருக்கு ரத்த அழுத்தம், மாரடைப்பு, தூக்கமின்மை, தலை வலி, பக்கவாதம், மறதி, சர்க்கரை நோய் போன்ற நோய்கள் ஏற்பட வாய்ப்புள்ளது ..இதற்கு இயற்கை முறையில் தீர்வு உள்ளது .இதை இந்த பதிவில் பார்க்கலாம்
1.நல்லெண்ணெய் 50 மில்லி எடுத்து அதனுடன்
50 எண்ணிக்கை தும்பை பூவை போட்டு
அதை நன்கு கொதிக்க வைத்து கொள்ளவும் பின்னர் அதை வடிகட்டி
21 நாளைக்கு மூக்கில் 3 சொட்டு
இட்டு வர குறட்டை தொந்தரவு அடியோடு குணமாகி நம் உடலும் ஆரோக்கியமாய் இருக்கும்
2.மூக்கிரட்டை செடியின் பொடியை
100 கிராம் எடுத்து கொள்ளவும் .
3.அதன் கூடவே 50 கிராம்
மிளகுத்தூள் சேர்த்து இதை நன்றாக
கலந்து வைத்து கொள்ளுங்கள்.
4.இதில் கால் தேக்கரண்டி அளவுக்கு
எடுத்து கொள்ளவும் .
5.பிறகு அதை ஒரு தேக்கரண்டி தேனில் குழைத்து
இரவு உணவு உண்ட அரை மணி நேரம் தாண்டி
உண்டு வாருங்கள் .
6.இப்படி உண்டு வர கர்ணகடூரமாக குறட்டை
விடுவதை நிறுத்தி சந்தோஷமாக நீங்களும்
அருகில் இருப்பவர்களும் உறங்கலாம் .