BREAKING: தமிழ்நாடு அமைச்சரவையில் திடீர் மாற்றம்! பொன்முடிக்கு கூடுதல் பொறுப்பு..!
SeithiSolai Tamil February 13, 2025 11:48 PM

தமிழ்நாட்டில் அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக ஆளுநர் மாளிகை அறிவித்துள்ளது. முதலமைச்சர் முக ஸ்டாலினின் பரிந்துரையின் பேரில், பால் மற்றும் பால்வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஆர். எஸ். ராஜகண்ணப்பன் மேற்கொண்டு வகித்து வந்த “காதி மற்றும் கிராமத் தொழில்கள் வாரியம்” துறை மாற்றப்பட்டுள்ளது. இந்த துறை இப்போது உயர்கல்வித் துறை அமைச்சர் டாக்டர் கே. பொன்முடிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்த மாற்றம் குறித்து அரசியல் வட்டாரங்களில் பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன. கடந்த சில மாதங்களாக பொன்முடி தொடர்பான சில விவகாரங்கள் அரசியல் சூழலில் பேசப்பட்ட நிலையில், அவருக்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டிருப்பது கவனிக்கத்தக்கது. இதேசமயம், ராஜகண்ணப்பன் வகித்திருந்த காதி மற்றும் கிராமத் தொழில்கள் துறை மாற்றப்பட்டுள்ள நிலையில், அவருக்கு புதிய பொறுப்புகள் வழங்கப்படுமா என்பது பரவலாக எதிர்பார்க்கப்படுகிறது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.