மணிப்பூரில் அடுத்த அதிர்ச்சியாக குக்கி மக்களுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் டையே மீண்டும் மோதல் ஏற்பட்டுள்ளது. மணிப்பூர் மாநிலத்தில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் குக்கி மக்கள் மற்றும் பாதுகாப்பு படையினரிடையே மீண்டும் மோதல் ஏற்பட்டதால் மணிப்பூரில் பரபரப்பு சூழ்நிலை உருவாகியுள்ளது.
இம்பால், மணிப்பூர் மாநிலத்தில் 2023ல் மே மாதம் குக்கி மற்றும் மெய்தி இன மக்களிடையே மோதல் வெடித்து பெரும் கலவரமாக வெடித்தது. இதனைத்தொடர்ந்து அங்கு நடந்த வன்முறை சம்பவங்களால் மிகப்பெரிய அளவிலான கலவரம் ஏற்பட்டது.
இந்த வன்முறையில் இதுவரை 250க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், சுமார் 50000க்கும் மேற்பட்ட மக்கள் தங்கள் வீடுகளை இழந்து முகாம்களில் தஞ்சம் அடைந்துள்ளனர். இந்நிலையில் மணிப்பூரில் அமைதியை நிலைநாட்ட மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
இருப்பினும் அங்கு தொடர் வன்முறை சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. இந்நிலையில் மணிப்பூர் முதல்வர் பைரோன்சிங் தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். இதையடுத்து மணிப்பூரில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுதப்பட்டது.
இந்நிலையில், மணிப்பூர் மாநிலத்தில் இயல்புநிலை திரும்பும் சூழலை ஏற்படுத்தும் வகையில், இன்று முதல் மாநிலம் முழுவதும் சாலைகளில் தடுப்புகள் அமைக்காமல் சுதந்திரமான போக்குவரத்து அனுமதிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்திருந்தது. அதன்படி இன்று பேருந்துகள் இயங்க தொடங்கின.
குக்கி மக்கள் பெரும்பான்மையாக வசிக்கும் பகுதிகளில் பேருந்துகள் மீது கல்வீசி தாக்குதல்கள் நடத்தப்பட்டன. குறிப்பாக காங்போக்பி மற்றும் சேனாபதி உட்பட பல பகுதிகளில் சாலைகளில் தடைகளை ஏற்படுத்தி போக்குவரத்தை நிறுத்த முயற்சி செய்தனர். குக்கி இன பெண்கள் நெடுஞ்சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட குக்கி இன மக்கள் மீது பாதுகாப்பு படையினர் தடியடி நடத்தினர். அப்போது பாதுகாப்பு படையினர் மற்றும் குக்கி மக்களிடையே மோதல் ஏற்பட்டது. இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.