Breaking: இனி எவரெஸ்ட் சிகரம் ஏறுபவர்களுக்கு ரூ.10 லட்சம் பரிசு… அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவிப்பு…!!!
SeithiSolai Tamil March 14, 2025 09:48 PM

தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு ஆட்சி பொறுப்பை ஏற்று நான்கு வருடங்கள் ஆகும் நிலையில் இன்று 2025 ஆம் ஆண்டுக்கான கடைசி பட்ஜெட்டை தாக்கல் செய்கிறது.இந்த பட்ஜெட்டை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்துள்ள நிலையில் பல்வேறு துறைகளுக்கும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு முக்கிய அறிவிப்புகள் வெளியாகிறது.

இந்நிலையில்இமயமலையில் உள்ள எவரெஸ்ட் சிகரம் ஏறுவது இப்போது வரை மிகப்பெரிய சாதனையாக கருதப்படும் நிலையில் அவர்களுக்கு உரிய பரிசு தொகை வழங்கப்படுவது கிடையாது. இதன் காரணமாக இனி இமயமலையில் உள்ள எவரெஸ்ட் சிகரத்தில் ஏறும் தமிழர்களுக்கு ரூ.10 லட்சம் வரையில் பரிசு வழங்கப்படும் என்று அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.