திருமணத்துக்கு வற்புறுத்திய 22 வயது காதலி கழுத்து நெரித்து கொலை; நண்பர்கள் பேச்சைக்கேட்டு விபரீத செயல்?
Tamilspark Tamil March 17, 2025 07:48 AM

கர்நாடக மாநிலத்தில் உள்ள காவேரி மாவட்டம், மசூரு கிராமத்தில் வசித்து வருபவர் ரமேஷ். இவரின் மகள் ஸ்வாதி (வயது 22). இவர் ராணிப்பேன்னுர் பகுதியில் செயல்படும் தனியார் மருத்துவமனையில் செவிலியராக இருக்கிறார். மார்ச் 03 அன்று வழக்கம்போல வேலைக்குச் சென்றவர், மீண்டும் வீட்டுக்கு வரவில்லை.

பெண் கொலை

அவரின் செல்போனுக்கு தொடர்பு கொண்டும் பலனில்லாததால், பெற்றோர் அவரை பல இடங்களில் தேடினர். இதனிடையே, மார்ச் 06 ன்று, துங்கபத்ரா ஆற்றில் பெண்ணின் சடலமாக மீட்கப்பட்டது. அவர் மாயமானது குறித்தும் புகாரும் கிடைக்காமல், அவர் கழுத்து நெரிக்கப்பட்டு உறுதியாக, அதிகாரிகளே உடலை நல்லடக்கம் செய்யும் சூழல் ஏற்பட்டது.

இதையும் படிங்க:

காதல்

மார்ச் 08 அன்று சுவாதியின் தந்தை ரமேஷ் காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே, அதிகாரிகளுக்கு சுவாதியின் மரணம் உறுதி செய்யப்பட்டது. அவரின் கொலை வழக்கில் தொடர்புடைய நபர்கள் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தினர். விசாரணையில், சுவாதி - நயாஸ் என்ற இளைஞர் இடையே காதல் உறவு இருந்தது தெரியவந்தது.

நயாஸ் ரேக்ளா ரேஸ் பார்ப்பதை வாடிக்கையாக இருக்கவே, அங்கு வினய், துர்க்கசாரி என்ற 2 நபர்களுடன் அறிமுகம் ஏற்பட்டு, அவர்களிடம் தனது காதல் வாழ்க்கை குறித்து கூறி இருக்கிறார். இருவரும் வெவ்வேறு மதம் என்பதால், காதலை கைவிடுங்கள், வீட்டில் எதிர்ப்பு கிளம்பும் என நயாசின் நண்பர்கள் கூறியுள்ளனர். இதனால் ந்யாsuம் பெண்ணிடம் பேசாமல் இருந்து வந்துள்ளனர்.

திட்டமிட்டு கொலை

இதனிடையே, சுவாதி தன்னை திருமணம் செய்துகொள்ள ந்யாஸிடம் கூறி இருக்கிறார். இதனால் நயாஸ், வினய், துர்க்கசாரி ஆகியோர் சேர்ந்து சுவாதியை கொலை செய்தனர். ஆட்கள் நடமாட்டம் இல்லாத இடத்தில் பெண்ணின் கழுத்தை நெரித்து மூச்சுத்திணறவைத்து கொலை நடந்துள்ளது. இந்த விஷயம் குறித்து தொடர் விசாரணை நடந்து வருகிறது.

இதையும் படிங்க:

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.