மார்ச் 22ல் மீண்டும் போராட்டம்... இனி காவல் துறையை தூங்கவிடமாட்டேன்... அண்ணாமலை ஆவேசம்!
Dinamaalai March 18, 2025 11:48 AM

நேற்று பாஜக தலைவர்கள் டாஸ்மாக் முறைகேடுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட முயன்ற நிலையில், போலீசார் கைது செய்து காவலில் வைத்திருந்தனர். அதன் பின்னர் மாலை, கைதாகி விடுதலை செய்யப்பட்ட பாஜக மாநில தலைவர் செய்தியாளர்களிடையே பேசுகையில், “இனி காவல் துறையை தூங்க விட மாட்டேன்” என்று தெரிவித்துள்ளார்.

நேற்று காலை சென்னையை அடுத்த கானத்தூரில் உள்ள வீட்டில் இருந்து புறப்பட்ட அண்ணாமலையை, அக்கரை அருகே தடுத்து நிறுத்திய காவல் துறையினர் கைது செய்து, தனியார் மண்டபத்தில் அடைத்து வைத்தனர்.

அண்ணாமலை - காவல் துறையினர் இடையே நீண்டநேர வாக்குவாதத்துக்குப் பிறவு நேற்றிரவு 7 மணிக்கு அண்ணாமலை மற்றும் பாஜகவினரை காவல் துறையினர் விடுதலை செய்தனர்.

இதனைத் தொடர்ந்து அண்ணாமலை செய்தியாளர்களிடம் பேசுகையில், "வரும் 22ம் தேதி மீண்டும் சென்னையில் போராட்டம் நடத்த வாய்ப்புள்ளது. காவல் துறை உயர் அதிகாரிகள் நடந்துகொண்ட விதம் கண்டிக்கத்தக்கது. போராட்டத்தைத் தீவிரப்படுத்துவோம். காவல் துறையினர் இனி நிம்மதியாக தூங்கக் கூடாது. பாஜக தொண்டர்கள் டாஸ்மாக் கடைகளில் முதல்வரின் படத்தை மாட்டுவார்கள்" என்றார்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.