பொதுவாக தேங்காய் எண்ணெயை கொண்டு தினமும் வாய் கொப்பளித்தால் நம் வாயில் உள்ள கிருமிகள் கொல்லப்படும் .மேலும் தொண்டையில் புண் இருந்தால் அது ஆறி விடும் .மேலும் இந்த எண்ணெயில் வாய் கொப்பளிக்க உண்டாகும் நன்மை பற்றி நாம் இப்பதிவில் காணலாம்
1. சிலர் உப்பு நீரை கொண்டு வாய் கொப்பளித்து வருகின்றனர் .இதுவும் ஆரோக்கியமான பழக்கம்தான் .ஆனால் இதை விட இந்த எண்ணெய் கொண்டு வாய் கொப்பளிக்கும்போது வாயில் வீக்கம் இருந்தால் குணமாகும் .
2.மேலும் வாய் பகுதியில் இருக்கும் நோய் பரப்பும் பாக்டீரியா முதல் வைரஸ் வரை கொல்லப்படும் .
3.மேலும் ஒற்றை தலைவலி குணமாகும் .மேலும் சளி தொல்லை இருக்கவே இருக்காது .இதை கொப்பளிக்கும் முறை பற்றி கூறியுள்ளோம் .
4.முதலில் தேங்காய் எண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணெய் ஒரு மேசைக்கரண்டி எடுத்துக்கொள்ளவும்
5. அடுத்து அதை வாயில் ஊற்றி 5 முதல் 7 நிமிடங்கள் வாயில் வைத்து முன்னும் பின்னும் கொப்பளித்துக்கொண்டேயிருக்கவும்
6.பின்பு அந்த எண்ணெய்யை துப்பிவிட வேண்டும்.
7.இப்போது எண்ணெயில் நிறம் மாறி இருப்பதை காணலாம்
8.இவ்வாறு செய்வதன்மூலம் வயிற்றில் இருக்கும் கிருமிகள் மேல் நோக்கி இழுக்கப்படும் பின் எண்ணையை துப்புவதன் மூலம் நம் உடலில் இருந்து கிருமிகள் வெளியேறும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர் .