பஞ்சாங்கம் மார்ச் 20 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!
Dhinasari Tamil March 20, 2025 05:48 PM

#featured_image %name%

இன்றைய பஞ்சாங்கம் – மார்ச் 20

தினசரி.காம்  ஶ்ரீராமஜெயம். ஜெய்ஸ்ரீராம் ஜெய்ஸ்ரீராம்

||श्री:|| 

!!ஸ்ரீ:!!

श्री मते रामानुजाय नम:
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

श्री मते रामानुजाय नम:
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

பஞ்சாங்கம்

பஞ்சாங்கம்

பங்குனி ~* 6 (20.3.2025 ) வியாழன் கிழமை.
வருடம் ~ க்ரோதி {க்ரோதி நாம சம்வத்ஸரம்}
அயனம் ~ உத்தராயணம்
ருது ~ சிசிர ருது.
மாதம் ~ பங்குனி மாஸம் { மீன மாதம்}
பக்ஷம் ~ க்ருஷ்ண பக்ஷம்.
திதி ~ night 12.00am வரை ஷஷ்டி பின் சப்தமி
நாள் ~ {குரு வாஸரம்} வியாழன் கிழமை.
நட்சத்திரம் ~ 09.00 pm வரை அனுஷம் பின் கேட்டை
யோகம் ~ வஜ்ரம்
கரணம் ~ கரஜை
அமிர்தாதியோகம்~ சுபயோகம்.
நல்ல நேரம் ~ காலை 10.30 ~ 11.30 & மாலை 5.00 ~ 6.00.
ராகு காலம்~ மதியம் 1.30 ~ 3.00.
எமகண்டம் ~ காலை 6.00 ~ 7.30.
குளிகை ~ காலை 9.00 ~ 10.30.
சூரிய உதயம் ~ காலை 6.21
சந்திராஷ்டமம் ~ மேஷம்
சூலம் ~ தெற்கு.
பரிகாரம் ~ நல்லெண்ணெய்.
ஸ்ராத்ததிதி ~ ஷஷ்டி
இன்று ~
கரிநாள்

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துக்கள்.
!!स्वस्तिप्रजाभ्यः परिपालयंतां, न्यायेन मार्गेण महीं महीशाः ।
गोब्राह्मणेभ्यः शुभमस्तु नित्यं, लोकाः समस्ताः सुखिनोभवंतु!!
॥ॐ शान्तिः शान्तिः शान्तिः |!
!!धर्मो रक्षति रक्षित:!!
!!लोकः समस्ताः सुखिनो भवन्तु!

sarathambal

சுப ஓரைகள்: அவரவர் இருப்பிடத்தில் சூரிய உதயத்திற்கு தகுந்தவாறு நேரத்தை கூட்டி, குறைத்து கொள்ளவும்.

காலை :
சுக்கிர ஓரை 08.01 முதல் 09.00 வரை
புதன் ஓரை 09.01 முதல் 10.00 வரை

பகல் :
குரு ஓரை 12.01 முதல் 01.00 வரை
சுக்கிர ஓரை 03.01 முதல் 04.00 வரை
புதன் ஓரை 04.01 முதல் 05.00 வரை

இரவு :
குரு ஓரை 07.01 முதல் 08.00 வரை

astrology panchangam rasipalan dhinasari 2 இன்றைய ராசிபலன்கள்
20.3.2025 மேஷம்

மேஷ ராசிக்கான பலன்கள் !

செய்யும் செயல்களில் பதற்றமின்றி செயல்படவும். நெருக்கமானவர்களுக்காக சிலவற்றை விட்டுக் கொடுத்துச் செயல்படுவது நல்லது. எதிர்காலம் தொடர்பான சிந்தனைகள் மற்றும் கற்பனைகள் அதிகரிக்கும். மனதிலிருக்கும் எண்ணங்களை வெளிப்படுத்தும் பொழுது சூழ்நிலை அறிந்து செயல்படவும். உடனிருப்பவர்கள் இடத்தில் தேவையற்ற விவாதங்களை தவிர்க்கவும். அமைதி வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : இளம்ரோஸ் நிறம்

அஸ்வினி : பதற்றமின்றி செயல்படவும்.
பரணி : கற்பனைகள் அதிகரிக்கும்.
கிருத்திகை : வாதங்களை தவிர்க்கவும்.

ரிஷபம்

ரிஷப ராசிக்கான பலன்கள் !

உத்தியோக பணிகளில் உற்சாகத்துடன் செயல்படுவீர்கள். வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகள் கைகூடும். குடும்பத்தில் மகிழ்ச்சியான கலகலப்பான சூழல் அமையும். மனதில் எதையும் செய்து முடிக்க முடியும் என்ற தன்னம்பிக்கை அதிகரிக்கும். உடன்பிறந்தவர்கள் ஒத்துழைப்பாக செயல்படுவார்கள். எழுத்து சார்ந்த துறைகளில் முன்னேற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். வெற்றி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : நீல நிறம்

கிருத்திகை : உற்சாகமான நாள்.
ரோகிணி : தன்னம்பிக்கை அதிகரிக்கும்.
மிருகசீரிஷம் : வாய்ப்புகள் கிடைக்கும்.

மிதுனம்

மிதுன ராசிக்கான பலன்கள் !

எதிர்பாராத சில பயணங்கள் மூலம் மாற்றமான சூழல் உருவாகும். நெருக்கடியாக இருந்தவர்கள் விலகிச் செல்வார்கள். ஆன்மிக பயணம் சாதகமாகும். விளையாட்டு செயல்களில் தனிப்பட்ட ஆர்வம் ஏற்படும். உலகியல் நடவடிக்கைகள் மூலம் மனதில் மாற்றங்களும் பழக்கவழக்கங்களில் புதுமையும் உருவாகும். புது விதமான சிந்தனைகள் மூலம் குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும். வரவு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : ஆகாயநீல நிறம்

மிருகசீரிஷம் : மாற்றமான நாள்.
திருவாதிரை : ஆர்வம் ஏற்படும்.
புனர்பூசம் : குழப்பங்கள் நீங்கும்.

கடகம்

கடக ராசிக்கான பலன்கள் !

எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். நீண்ட நாட்களாக தடைப்பட்டு வந்த தனவரவுகள் கிடைக்கும். சகோதர வகையில் ஒத்துழைப்புகள் கிடைக்கும். சுபகாரிய பேச்சுவார்த்தைகள் சாதகமாக முடிவு பெறும். உத்தியோகப் பணிகளில் உயர் பொறுப்புகளில் இருப்பவர்களின் ஆதரவுகள் மேம்படும். மனதில் நினைத்த காரியங்களை எளிதில் செய்து முடிப்பீர்கள். துன்பம் அகலும் நாள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்

புனர்பூசம் : உதவிகள் கிடைக்கும்.
பூசம் : ஒத்துழைப்புகள் கிடைக்கும்.
ஆயில்யம் : ஆதரவுகள் மேம்படும்.

சிம்மம்

சிம்ம ராசிக்கான பலன்கள் !

சமூகப் பணிகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் ஏற்படும். தந்தை பற்றிய சிந்தனைகள் அவ்வப்போது தோன்றி மறையும். ஆரோக்கியம் தொடர்பான இன்னல்கள் குறையும். வியாபாரம் நிமித்தமான சிந்தனைகள் மேம்படும். ஓட்டுநர் துறைகளில் இருந்துவந்த இழுபறியான சூழல் மறையும். விவசாய பணிகளில் மேன்மை உண்டாகும். கல்விப் பணிகளில் ஈடுபாடுகள் உண்டாகும். நிறைவு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

மகம் : முன்னேற்றம் ஏற்படும்.
பூரம் : இன்னல்கள் குறையும்.
உத்திரம் : மேன்மை உண்டாகும்.

கன்னி

கன்னி ராசிக்கான பலன்கள் !

பாகப்பிரிவினை தொடர்பான விஷயங்களில் லாபகரமான சூழ்நிலைகள் காணப்படும். நினைத்த காரியங்களை எண்ணிய விதத்தில் செய்து முடிப்பீர்கள். பொழுதுபோக்கு தொடர்பான விஷயங்களில் ஈடுபாடு அதிகரிக்கும். உத்தியோக பணிகளில் திறமைகளை வெளிப்படுத்தி பலரின் பாராட்டுகளைப் பெறுவீர்கள். பெற்றோரின் ஒத்துழைப்பு மனதிற்கு புதிய நம்பிக்கையை ஏற்படுத்தும். பணிவு வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்

உத்திரம் : லாபகரமான நாள்.
அஸ்தம் : ஈடுபாடு அதிகரிக்கும்.
சித்திரை : நம்பிக்கை பிறக்கும்.

துலாம்

துலாம் ராசிக்கான பலன்கள் !

வியாபாரத்தில் உறவினர்களின் உதவிகள் கிடைக்கும். கல்வி தொடர்பான செயல்பாடுகளில் மேன்மை உண்டாகும். கடன் பிரச்சனைகள் கட்டுக்குள் இருக்கும். நுணுக்கமான விஷயங்களை புரிந்து கொள்வீர்கள். பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். பேச்சு திறமை மேம்படும். சுபகாரிய பேச்சுவார்த்தைகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். நண்பர்களால் ஆதாயம் உண்டாகும். சிரமம் அகலும் நாள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : அடர்பச்சை நிறம்

சித்திரை : உதவிகள் கிடைக்கும்.
சுவாதி : புரிதல் உண்டாகும்.
விசாகம் : ஆதாயம் உண்டாகும்.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்கான பலன்கள் !

சஞ்சலமான சிந்தனைகள் மூலம் குழப்பங்கள் உண்டாகும். எதிர்பாராத சில செலவுகள் மூலம் நெருக்கடிகள் ஏற்படும். செயல்பாடுகளில் கட்டுப்பாடுகள் அதிகரிக்கும். பொறுப்புணர்ந்து செயல்படுவது நன்மையை ஏற்படுத்தும். விருப்பமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். கணவன் மனைவிக்கு இடையே அனுசரித்து நடந்து கொள்ளவும். இரக்கம் வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்

விசாகம் : குழப்பங்கள் உண்டாகும்.
அனுஷம் : நன்மையான நாள்.
கேட்டை : அனுசரித்துச் செல்லவும்.

தனுசு

தனுசு ராசிக்கான பலன்கள் !

ஆடம்பரமான பொருட்களின் மீது விருப்பம் அதிகரிக்கும். எதிர்பாராத சில பயணம் மூலம் மாற்றம் உண்டாகும். பிரிந்து சென்றவர்களை பற்றிய நினைவுகள் மேம்படும். தந்தையின் ஆரோக்கியம் நிமித்தமான செயல்பாடுகளில் கவனம் வேண்டும். உங்களின் பலம் மற்றும் பலவீனங்களை அறிந்து கொள்வீர்கள். நீண்டநாள் பிரச்சனைகளுக்கு தெளிவுகள் ஏற்படும். பிரீதி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்

மூலம் : மாற்றம் உண்டாகும்.
பூராடம் : கவனம் வேண்டும்.
உத்திராடம் : தெளிவுகள் ஏற்படும்.

மகரம்

மகர ராசிக்கான பலன்கள் !

குடும்பத்தில் ஒற்றுமை பிறக்கும். பூர்வீக சொத்துக்கள் மூலம் ஆதாயம் உண்டாகும். உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்புகள் கிடைக்கும். கல்வியில் இருந்து வந்த ஆர்வமின்மை குறையும். சேமிப்பு மேம்படுத்துவது தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். பிள்ளைகள் மூலம் பெருமைகள் உண்டாகும். நுட்பமான விஷயங்களை புரிந்து கொள்வீர்கள். சுகம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : சந்தன நிறம்

உத்திராடம் : ஒற்றுமை பிறக்கும்.
திருவோணம் : ஆர்வமின்மை குறையும்.
அவிட்டம் : புரிதல் உண்டாகும்.

கும்பம்

கும்ப ராசிக்கான பலன்கள் !

வியாபார விஷயங்களில் நுணுக்கங்களை அறிந்து கொள்வீர்கள். ஆரோக்கியம் தொடர்பான பிரச்சனைகள் குறையும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் காணப்படும். மனை விஷயங்களில் லாபங்கள் மேம்படும். நெருக்கமானவர்களிடம் மனம் திறந்து பேசுவதன் மூலம் தெளிவு ஏற்படும். சமூக பணிகளில் இருப்பவர்களுக்கு அங்கீகாரங்கள் கிடைக்கும். நலம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

அவிட்டம் : நுணுக்கங்களை அறிவீர்கள்.
சதயம் : லாபங்கள் மேம்படும்.
பூரட்டாதி : அங்கீகாரங்கள் கிடைக்கும்.

மீனம்

மீன ராசிக்கான பலன்கள் !

பூர்வீக சொத்துகளில் இருந்துவந்த பிரச்சனைகள் குறையும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். மனதில் புதுவிதமான தேடல்கள் உண்டாகும். கூட்டாளிகளிடம் ஒற்றுமையான சூழல் ஏற்படும். எதிர்பாராத சில செலவுகள் மூலம் சேமிப்புகள் குறையும். அரசு தொடர்பான காரியங்களில் நிதானம் வேண்டும். தொல்லை அகலும் நாள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

பூரட்டாதி : பிரச்சனைகள் குறையும்.
உத்திரட்டாதி : தேடல்கள் உண்டாகும்.
ரேவதி : நிதானம் வேண்டும்.

இன்றைய நற் சிந்தனைகள்

விடாமுயற்சி

ஆசையில்லாத முயற்சியால் பயனில்லை. முயற்சியில்லாத ஆசையால் பயனில்லை.

உன்னிடம் மறைந்திருக்கும் ஆற்றல்களை வெளிக்கொணரும் வழி விடா முயற்சியும், தொடர்ந்த உழைப்புமே ஆகும்; வலிமையோ, புத்திசாலித்தனமோ அல்ல.- Sir Winston Churchill

நான் மெதுவாக நடப்பவன்தான்; ஆனால், ஒருபோதும் பின்வாங்குவதில்லை.
– Abraham Lincoln.

thiruvalluvar

தினம் ஒரு திருக்குறள்

நாள்தோறும் திருக்குறள் படிப்போம், நடப்போம் அதன்படி, நல்லறம் வளர்ப்போம்

அதிகாரம் : படைச்செருக்கு

குறள் 775

விழித்தகண் வேல்கொண் டெறிய அழித்திமைப்பின்
ஒட்டன்றோ வன்க ணவர்க்கு.

மு.வ உரை:
பகைவரை சினந்து நோக்கியக் கண், அவர் வேலைக் கொண்டு எறிந்த போது மூடி இமைக்குமானால், அது வீரமுடையவர்க்குத் தோல்வி அன்றோ.

இன்றைய சிந்தனைக்கு

”யானெனும் செருக்கு மனிதர்க்குப் பகை”

‘நமக்குத்தான் அனைத்தும் தெரியும்’ என்ற செருக்குதான் மனிதனின் முதல் பகைவன், “எம்மால்தான்” அனைத்துமே இயலும், நான் அனைவரிலும் சிறந்தவன் என்ற இறுமாப்பு, இறுதியில் தோல்வியில்தான் முடியும்…

எந்த மனதில் ‘செருக்கு’ சூழ்ந்திருக்கிறதோ அங்கு சிக்கல்களும் இருக்கும். ’’நான்’’ அனைவரிலும் சிறந்தவன் என்ற இறுமாப்பு, இறுதியில் தோல்வியையே கொடுக்கும்…

மனிதனுக்கும் மனிதனுக்கும் இடையில் தடையாக இருப்பது இந்த ‘’நான்’’ எனும் செருக்குதான்… !

பணியிடமாகட்டும், மாமியார் மருமகள் உறவுகளாகட்டும், கணவன் மனைவிடையே ஆகட்டும், இங்கெல்லாம் உறவுமுறை கெடுவதற்கு இந்த கேடான எண்ணங்களே காரணம்…!

நண்பர்களிடையே பிரிவு நிகழ்வதும் இந்த எண்ணங்களினால்தான்…!

இன்று செயல்படுவோம், நாளை செயல்படுவோமா…? என்று நமக்குத் தெரியாது. இப்படியிருக்க, நமக்கு இந்த செருக்கு மிகத் தேவைதானா…? என்று சற்று ஆலோசிக்க வேண்டும்…!

ஆம் நண்பர்களே…!

‘நான்’, ‘எனது’ என்பது அறியாமை…!
‘நாம்,’ ‘நம்முடையது’ என்பது அறிவுடைமை…!!

?? நாம் வாழ்வில் முழுமையான நிலையினை அடைய விரும்பினால், ‘’நான்’’ எனும் செருக்கினை முழுமையாக அகற்றிவிடுவதே சாலச் சிறந்தது…!??

  • தினசரி.காம்

News First Appeared in

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.