இதுகுறித்து போலீசார் கூறுகையில், “தூத்துக்குடி லூர்தம்மாள் புரத்தைச் சேர்ந்தவர் பீட்டர் மனைவி பிரமிளா (54), அந்த பகுதியில் மகளிர் சுய உதவி குழு தலைவியாக உள்ளார். இவரது தங்கையின் மகள் கணவரான லூர்தம்மாள் புரத்தை சேர்ந்த தனபாலன் மகன் அண்டன் (26) என்பவர் மகளிர் சுய உதவி குழு மூலம் ரூ.1லட்சத்து 20 ஆயிரம் கடன் வாங்கினாராம்.
ஆனால் அந்த கடனை திருப்பி செலுத்தவில்லையாம். இதனால் பிரமிளா போன் மூலம் அண்டனிடம் பணத்தை கட்டுமாறு கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த அடைந்த அண்டன் பிரமிளா வீட்டுக்கு சென்று அவரிடம் தகராறு செய்து அவரை கையால் கழுத்தை நெரித்து கொலை செய்ய முயற்சி செய்தாராம்.
அப்போது வீட்டில் இருந்தவர்கள் பார்த்து சத்தம் போடவே அங்கிருந்து அண்டன் ஓடிவிட்டாராம். இதில் காயம் அடைந்த பிரமிளா தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.”
இது குறித்து புகாரின் பேரில் தாளமுத்து நகர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ஜெயந்தி கொலை முயற்சி வழக்குப் பதிந்து, அண்டனை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.