தமிழகத்தில் வெயிலின் தாக்கம் தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இன்று முதல் 30ம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை படிப்படியாக 2 - 3° செல்சியஸ் உயரக்கூடும் என தெரிவித்துள்ளது.
மேலும், தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு அதிகபட்ச வெப்பநிலை ஓரிரு இடங்களில் இயல்பை விட 2- 3° செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும் எனவும் அதிக வெப்பநிலையும், அதிக ஈரப்பதமும் இருக்கக்கூடிய நிலையில், தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அசௌகரியம் ஏற்படலாம் என எச்சரித்துள்ளது.
இந்த நிலையில் வெயிலின் தாக்கம் தொடர்பாக தனியார் வானிலை ஆய்வாளர் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் வெளியிட்டுள்ள பதிவில், வட மாவட்டங்களுக்கு ஆந்திர கடற்கரை அருகே உள்ள வேலூர், ராணிப்பேட்டைர திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் இன்று முதலாவதாக 40C வெப்பம் பதிவாகலாம் என தெரிவித்துள்ளார். மேலும் சென்னையின் உட்புற பகுதிகளிலும் வெப்பமான நாளாக இருக்கும் என கூறியுள்ளார்.
இதே போல காஞ்சிபுரம் திருவள்ளுர் மற்றும் சென்னை புறநகர் பகுதிகளில் இந்த வருடத்தின் மிக வெப்பமான நாளை மார்ச் மாதத்திலேயே 38/39 C-ஐ கடக்கும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் மீனம்பாக்கம் பகுதியானது அதிகபட்ச வெப்பத்தை பதிவு செய்யும் என கூறியுள்ளார்.
மேலும் மதுரையில் சுமார் 37/38C வெப்பநிலை இருக்கும். சேலம் 37-38C, திருச்சி 37C. ஈரோடு மற்றும் கரூரில் சுமார் 38 C மணிக்கு வெப்பநிலை இருக்கும். இதே போல கோவை 37 C வெப்பமானது பதிவாகவும் என தமிழ்நாடு வெதர்மேன் அலர்ட் விடுத்துள்ளார்.