ஐபிஎல் போட்டிகள் மார்ச் 22ம் தேதி தொடங்கி இந்தியாவின் முக்கிய நகரங்களில் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் போட்டி நடக்க உள்ள நிலையில், போக்குவரத்து மாற்றம் மற்றும் வாகன நிறுத்தம் தொடர்பான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அதன்படி TATA IPL Season -2025 கிரிக்கெட் போட்டிகள் 28.03.2025, 05.04.2025, 11.04.2025, 25.04.2025, 30.04.2025 & 12.05.2025 ஆகிய நாட்களில் சென்னை M.A சிதம்பரம் மைதானத்தில் நடைபெற உள்ளன. இப்போட்டிகள் நடைபெறுவதை முன்னிட்டு போட்டி நடைபெறும் நாட்களில் 17.00 மணி முதல் 23.00 மணி வரையிலும் வாகன நிறுத்த ஏற்பாடுகள் மற்றும் போக்குவரத்தில் மாற்றங்கள் செய்யப்பட உள்ளன.
1. பொதுமக்கள் MRTS, உள்ளூர் ரயில் அல்லது மெட்ரோ ரயில் அரசு எஸ்டேட் மெட்ரோ நிலையம் மூலமாக சேப்பாக்கம் நிலையம் வரும்படி அறிவுறுத்தப்படுகின்றனர்.
வாகன நிறுத்தத்திற்கான அனுமதி அட்டை வைத்திருப்பவர்கள் வாகன அனுமதி அட்டையில் குறிப்பிட்டுள்ளபடி நிர்ணயிக்கப்பட்ட இடத்தில் வாகனங்களை நிறுத்த அனுமதிக்கப்படுகின்றனர். இவ்வாகன நிறுத்த இடத்திலிருந்து கிரிக்கெட் மைதானம் 200 மீட்டர் நடந்து செல்லும் தொலைவில் உள்ளன.
அனுமதி அட்டை வாங்காத வாகனங்கள் போட்டியை காண சொந்த வாகனத்தில் வரும் நபர்கள் கதீட்ரல் சாலை மற்றும் R.K சாலை வழியாக காமராஜர் சாலை சென்று மெரினா கடற்கரை சாலை அடைந்து மெரினா கடற்கரை சர்வீஸ் சாலையில் தங்கள் வாகனங்களை நிறுத்திவிட்டு, பின்னர் சுரங்கப்பாதைகள் பயன்படுத்தி நடைபயணமாக சென்று மைதானத்தை அடையலாம்.
போட்டியை காண டாக்சிகள், ஆட்டோ ரிக்ஷாக்கள் போன்ற வணிக வாகனத்தில் வரும் நபர்களுக்கு அண்ணாசாலையிலிருந்து வாலாஜா சாலைக்குள் சென்று மைதானத்திற்கு அருகில் இறக்கிவிடப்பட்டு, மேலும் வாகனங்கள் சிவானந்தா சாலையில் நிறுத்த அனுமதிக்கப்படும்.
வாலாஜா சாலையில் கூடுதலாக மாநகர பேருந்துகள் மற்றும் சிறப்பு பேருந்துகள் இயக்க அனுமதிக்கப்படாது. அவ்வாகனங்கள் சுவாமி சிவானந்தா சாலையில் மட்டுமே பயணிகளை ஏற்றிச்செல்ல/ இறக்கி விடுவதற்கு அனுமதிக்கப்படும். பொதுமக்கள் பிரஸ் கிளப் சாலை வழியாக சென்று கிரிக்கெட் மைதானத்தை அடையலாம். (பேருந்து நிறுத்த இடத்திலிருந்து கிரிக்கெட் மைதானம் 300 மீட்டர் நடந்து செல்லும் தொலைவில் உள்ளன)
விக்டோரியா ஹாஸ்டல் சாலை செல்ல பாரதி சாலை வழியாக மட்டுமே அனுமதிக்கப்படும். வாலாஜா சாலையில் இருந்து செல்ல அனுமதி இல்லை. பெல்ஸ் சாலை ஒரு வழிப்பாதையாக இயக்கப்படும்பாரதி. சாலையிலிருந்துபெல்ஸ் சாலை செல்ல அனுமதிக்கப்படும்
வாலாஜா சாலையிலிருந்து செல்ல அனுமதி இல்லை. ரத்னா கஃபேவிலிருந்து காமராஜர் சாலை நோக்கிச் செல்லும் அனைத்து வாகனங்களும் பெல்ஸ் சாலை மற்றும் வாலாஜா சாலையில் திருப்பிவிடப்படும். வடக்கு திசையில் இருந்து வரும் பார்வையாளர்கள் தங்கள் வாகனங்களை சுவாமி சிவானந்தா சாலையில், சாலையோரப் பகுதியில் நிறுத்த வேண்டும்.
காமராஜர் சாலை மற்றும் அண்ணா சாலையிலிருந்து வரும் அனைத்து வாகனங்களும் மெரினா கடற்கரை சர்வீஸ் சாலையில்தங்கள் வாகனங்களை நிறுத்த வேண்டும். சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறையினர் தற்காலிகமாக இந்த பகுதியில் நிறுத்துவதற்கு தடைசெய்யப்பட்டுள்ளது.