கொடைக்கானல் காட்டேஜ் ஓனர் எரித்துக் கொலை; மதுரை இளைஞர் கைது - நடந்தது என்ன?
Vikatan March 28, 2025 11:48 PM

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் சரடி மெத்து பெருமாள்பள்ளத்தைத் சேர்ந்தவர் சிவராஜன் (58). இவர் அதேபகுதியில் காட்டேஜ் நடத்தி வந்தார்.

இவர் போதை பழக்கத்துக்கு அடிமையானதால் குடும்பத்தினர் மதுரை அழகர்கோயில் அருகே உள்ள போதை மீட்பு மறுவாழ்வு மையத்தில் சேர்த்தனர். அங்கு போதையில் இருந்து மீள்வதற்காக சிகிச்சையில் இருந்து மணிகண்டன் (28) உள்ளிட்ட சிலருடன் சிவராஜனுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது.

கொடைக்கானல்

அதனடிப்படையில் சிகிச்சையை முடித்து வந்த மணிகண்டன் மற்றும் அவர்கள் நண்பரக்ள் சிவராஜனுடைய காட்டோஜிக்கு சென்று தங்கினர்.

இதனைத்தொடர்ந்து காட்டேஜில் இருந்த சிவராஜன் திடீரென மாயமானார். சில நாள்கள் கழித்து சிவராஜனை காணவில்லை என குடும்பத்தினர் போலீஸாரிடம் புகார் அளித்தனர்.

அதனடிப்படையில் கொடைக்கானல் போலீஸார் விசாரித்தனர். காட்டேஜில் விசாரணை நடத்தியபோது, சிவராஜன் இருந்த அறையில் ரத்தக்கறை இருந்ததை பார்த்துள்ளனர். அங்கிருந்த பணியாளர்களிடம் விசாரித்தனர். அவர்கள் மணிகண்டன் தரப்பினர் வந்து தங்கியதைத் தெரிவித்துள்ளனர்.

கைது

இதையடுத்து மணிகண்டனை பிடித்து விசாரித்தபோது, சிவராஜனை எரித்துக் கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். மேலும் அவரின் உடலை அருகே தூக்கிவீசியதும் தெரியவந்தது. போலீஸார் சிவராஜனின் உடலை மீட்டு பிரேதப்பரிசோதனைக்காக அனுப்பினர். மணிகண்டனை கைது செய்து இவ்வழக்கில் தொடர்புடையவர்களை தேடி வருகின்றனர்.

Vikatan WhatsApp Channel

இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.