சென்னை மக்கள் கவனத்திற்கு! ரம்ஜான் பண்டிகை எதிரொலி - புறநகர் ரெயில் சேவையில் மாற்றம்!
Seithipunal Tamil March 29, 2025 08:48 AM

ரம்ஜான் பண்டிகை: புறநகர் ரெயில் பயணிகளுக்கான முக்கிய அறிவிப்பு

ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு, மார்ச் 31 (திங்கட்கிழமை) அன்று சென்னை புறநகர் ரெயில் சேவை, ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி இயங்கும் என்று தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.

தமிழகத்தில் ரம்ஜான் பண்டிகை அரசு விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பயணிகள் முன்கூட்டியே திட்டமிட்டு பயணங்களை திட்டமிடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

தற்போது நடைமுறையில் உள்ள புறநகர் ரெயில் அட்டவணையின் அடிப்படையில், முக்கிய ரெயில் சேவைகளில் சில மாற்றங்கள் ஏற்படலாம் என்பதால், பயணிகள் தெற்கு ரெயில்வே அதிகாரப்பூர்வ அறிவிப்புகளை அனுசரிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
 

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.