மலபார் மலைப்பகுதியில் உள்ள டிக்கெட் கவுண்டரில் திருட்டு… கண்ணாடி ஜன்னல் வழியாக உள்ளே நுழைந்த மர்ம நபர்… அதிர்ச்சி சம்பவம்…!!
SeithiSolai Tamil April 02, 2025 01:48 AM

மும்பை மலபார் மலைப்பகுதியில் புதிதாக திறக்கப்பட்ட காட்டுப்பாதையின் டிக்கெட் கவுன்டரில் திருட்டு சம்பவம் நடைபெற்றுள்ளதாக சிசிடிவி வீடியோ மூலம் தெரியவந்துள்ளது. இந்த வீடியோவில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் கண்ணாடி ஜன்னல் வழியாக உள்ளே சென்று, கேஷ் கவுன்டரில் இருந்த விலை மதிப்புள்ள பொருட்களை எடுத்துச் சென்றதைக் காணலாம். இந்த சம்பவம் மார்ச் 21ஆம் தேதி இரவு 11:30 மணிக்கு நடந்ததாக கூறப்படுகிறது.

இந்த சம்பவம் சிசிடிவி மூலமாக முழுமையாக பதிவு செய்யப்பட்டாலும், இந்த காட்டுப்பாதையை நிர்வகிக்கும் ப்ரியஹன் மும்பை மாநகராட்சி (BMC) இதுவரை போலீசில் எந்தவிதமான அதிகாரப்பூர்வ புகாரும் அளிக்கவில்லை. இந்நிலையில், போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்து உள்ளனர். நகர காவல் துணை ஆணையர் மோகித் கார்க் கூறுகையில், புகார் பதிவாகாததால் வழக்கு எடுக்கப்படவில்லை என்றார்.

BMC மேலதிக ஆணையர் அபிஜீத் பங்கார் இது குறித்து உறுதிப்படுத்தி, புகார் பதிவு செய்ய உத்தரவு வழங்கப்பட்டதாக தெரிவித்தார். இதுவரை டிக்கெட் கவுன்டரில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் எடுக்கப்படவில்லை என்பது விமர்சனத்திற்கு வழிவகுத்துள்ளது. அதேசமயம், இந்த மலபார் மலை காட்டுப்பாதை பொதுமக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.