நேபாளத்தைச் சேர்ந்த 35 வயது பெண் ஒருவர் தனது 11 வயது மகளுடன் உறவினர் வீட்டிற்கு வந்துள்ளார். ரீல்ஸ் எடுப்பதற்காகத் தனது மகளுடன் கங்கை ஆற்றிக்கு வந்துள்ளார்.
அப்போது அந்த பெண் தான் ஆற்றில் இறங்கும் காட்சிகளை செல்போனில் வீடியோ எடுக்கமாறு தனது மகளிடம் கூறியுள்ளார்.மேலும் ரீல்ஸ் எடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. அந்த வீடியோவில், அந்தப் பெண் சிரித்தபடி ஆற்றில் இறங்குகிறார். சில நொடிகளில், அவள் நிலை தடுமாறி கீழே விழுகிறார். பிறகு ஆற்றில் அடித்துச் செல்லப்படுகிறார். " அம்மா .. அம்மா.. என்று அவளது மகள் கத்துகிறாள். மேலும் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட பெண்ணும் உதவி கேட்டுக் கத்துகிறார்.
பிறகு ஆற்றில் மூழ்கி அடித்துச் செல்லப்படும் காட்சிகள் அனைத்தும் அந்த வீடியோ பதிவில் இடம்பெற்றுள்ளனர்.இதனையடுத்து இந்த சம்பவம் குறித்து அங்கிருந்தவர்கள் காவல் அதிகாரிகளுக்குத் தகவல் கொடுத்தனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் அவர்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மகள் கண் முன்னே நடந்த இந்த விபத்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அண்மைக் காலமாக ரீல்ஸ் மற்றும் சமூக ஊடகங்களில் வீடியோ எடுக்கும்போது பழக்கம் அதிகரித்து வருகிறது இதனால் உயிரிழப்புகளும் ஏற்படுகிறது. இதுபோன்ற சம்பவம் முதல் முறை அல்ல. கடந்த ஆண்டு ஜூலையில், 26 வயது இன்ஸ்டாகிராம் பிரபலம் ரீல்ஸ் வீடியோ எடுத்தபோது மகாராஷ்டிராவில் உள்ள பள்ளத்தாக்கில் தவறிவிழுந்து இறந்தார்.
மேலும் ஆற்று ஓரங்களிலும், மலைப் பகுதிகளிலும் ஆபத்தான இடங்களில் வீடியோ எடுப்பதைத் தவிர்க்க வேண்டும் என்று அதிகாரிகள் கூறுகின்றனர். குறிப்பாக இயற்கை சூழலில் இருக்கும்போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்துகிறார்கள். தற்பொழுது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.