சென்னை வளசரவாக்கம் சவுத்ரி நகர், 4வது தெருவில் 2 தளங்கள் கொண்ட சொகுசு பங்களா ஒன்றில் குற்றவியல் வழக்கறிஞரான நடராஜன் (78), அவரது மனைவி தங்கம் (73). மகன் ஸ்ரீராம் (50), மருமகள் ஷியாமளா (45), பேத்தி ஸ்ரேயா (20), பேரன் ஷர்வன் (17) ஆகியோர் வசித்து வந்தனர்.
இந்நிலையில் கடந்த 11ம் தேதி ஸ்ரீராம், அவரது மனைவி மற்றும் மகளுடன் அடையாறு சென்று விட்டார். வீட்டில் உடல்நலமின்றி படுத்த படுக்கையாக இருந்த தங்கம், நடராஜன் மற்றும் அவர்களது பேரன் ஷர்வன், வீட்டு வேலை செய்யும் பெண் ராமாபுரத்தை சேர்ந்த சரஸ்வதி (26) ஆகியோர் இருந்தனர்.
இந்நிலையில் அன்று மதியம் வீட்டில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் நடராஜன், அவரது மனைவி தங்கம் ஆகியோர் உயிரிழந்தனர்.
வீடு முழுவதும் தீ பரவிய நிலையில் ஷர்வனும் சரஸ்வதியும் முதல் தளத்தில் இருந்து கீழே குதித்து உயிர் தப்பினர். இருப்பினும் இருவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அவர்கள் இருவரும் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இந்நிலையில் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பணிப்பெண் ச்சரஸ்வதி சிகிச்சைப் பலனளிக்காமல் நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து தீ விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது.
இது குறித்து வழக்குப்பதிவு செய்து வளசரவாக்கம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.