அந்தவகையில், கர்நாடகத்தில் மே மாதம் தொடங்கியதிலிருந்து கொரோனா தொற்று மெல்ல அதிகரிப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சுகாதாரத்துறை தரவுகளின்படி, ஜனவரியில் 3 பேருக்கும், பிப்ரவரியில் ஒருவருக்கும் கொரோனா பதிவாகியுள்ளன. மார்ச், ஏப்ரல் மாதங்களில் தலா 3 பேருக்குத் தொற்று பதிவாகியது. இதையடுத்து மே மாதத்தில் 33 பேருக்கு கொரோனாத் தொற்று கண்டறியப்பட்டுள்ளன.
புதிய பாதிப்புகளை பொறுத்தவரை பெங்களூர் கிராமப்புற மாவட்டமான ஹோல்கோட்டைச் சேர்ந்த 9 மாதக் குழந்தைக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. குழந்தை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்து நிலையில், தொடர் சிகிச்சை அளிப்பதற்காக பெங்களூருவில் உள்ள வாணி விலாஸ் மருத்துவமனைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
தற்போது கர்நாடக மாநிலத்தில் 16 பேர் செயலில் இருப்பதாகவும் அதேசமயம் இந்தியாவில் 257 பேருக்கு கொரோனா தொற்று உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோருக்கு லேசான அறிகுறிகள் இருப்பதாக தெரிகிறது.பொதுமக்கள் பீதியடைய வேண்டாம் எனவும் விழிப்புடன் இருக்கும்படி மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. கர்நாடகம் முழுவதும் உள்ள மருத்துவமனைகளில், காய்ச்சல் போன்ற நோய், கடுமையான சுவாச தொற்று ஆகியவை உன்னிப்பாகக் கண்காணிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளன.