“தொடர்ந்து குறையும் குழந்தை பிறப்பு விகிதம்”… இனி மக்கள் தொகை… கவலையில் ஜப்பான் பிரதமர்… வெளியான முக்கிய அறிவிப்பு..!!!
SeithiSolai Tamil June 07, 2025 07:48 AM

உலகிலேயே அதிக வயது மூப்புடைய மக்கள் உள்ள நாடு ஜப்பான். இரண்டாம் உலகப் போரை அடுத்து குழந்தைகள் பிறப்பு விகிதத்தை அதிகரிக்க ஜப்பான் அரசு அதிரடியான நடவடிக்கைகளை மேற்கொண்டதால் 27 லட்சம் குழந்தைகள் பிறந்தன.

ஆனால் தற்போது நான்கில் ஒரு பங்கு தான் குழந்தைகள் பிறப்பு விகிதம் உள்ளதாக அரசு தரவுகள் கூறுகிறது. அதாவது ஜப்பானில் எதிர்பார்க்கப்பட்டதை விட கடந்த ஆண்டு குழந்தைகள் பிறப்பு விகிதம் அதிரடியாக குறைந்துள்ளது.

கடந்த 2024 ஆம் ஆண்டு 6,86,061 குழந்தைகள் பிறந்துள்ளன. இது குறித்து ஜப்பான் பிரதமர் ஷிகேரு இஷிபா கூறியதாவது, ஜப்பானில் வயது மூப்பு மக்கள் தொகை அதிகரித்தும், சுருங்கி வரும் மக்கள் தொகையும் அமைதியான எமர்ஜென்சி என தெரிவித்துள்ளார்.

ஜப்பானில் திருமணமான தம்பதிகள் குடும்பம் மற்றும் வேலையை பார்த்துக் கொள்ளும் வகையில் தற்போது வேலை இடங்களில் வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கவும், பிறப்பு விகிதத்தை அதிகப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

தற்போது மூத்த மக்கள் அதிகமாகவும், குழந்தை பிறப்பு விகிதம் குறைவாகும் உள்ள நாடாக ஜப்பான் மாறி வருகிறது. ஏற்கனவே தென்கொரியா, சீனா போன்ற நாடுகள் அதிக குழந்தைகளை பெற்றுக் கொள்ள ஊக்குவிக்க போராடி வருகின்றனர். மேலும் வியட்நாமில் 2 குழந்தைகள் என்ற சட்டத்தை அரசு ரத்து செய்துள்ளது முக்கியமானதாகும்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.