“10 வருஷ ரகசியம்”… பூஜை அறையில் தந்தையின் பிணம்… 19 வயதில் உண்மையை சொன்ன மகள்… கள்ளக்காதலால் சீரழிந்த தாய்… நீதி கிடைத்த நாளில் பெண் உயிரோடு இல்லை.. வேதனை சம்பவம்…!!!!
SeithiSolai Tamil August 03, 2025 05:48 PM

கர்நாடக மாநிலம் தவனகிரே மாவட்டம் ஹொன்னள்ளி காவல் நிலையத்தில், 2015ஆம் ஆண்டு ஒரு 19 வயது மாணவி உஷா எழுப்பிய புகார் போலீசாரை சில காலம் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. “என் அம்மா, என் அப்பாவை கொன்று பூஜை அறையில் புதைத்திருக்கிறார்” என்ற தகவலை ஆரம்பத்தில் யாரும் நம்பவில்லை.

ஆனால், தொடர்ந்து பலமுறை காவல்நிலையம் சென்று கதையைப் பகிர்ந்த உஷாவின் அழைப்பை போலீசார் விட்டு வைக்க முடியவில்லை.

பின்னர், ஆகஸ்ட் 12, 2015 அன்று போலீசார், நீதிமன்ற அதிகாரிகள் மற்றும் மருத்துவ நிபுணர்களுடன் உஷாவின் நெலஹொன்னே கிராம வீட்டிற்கு சென்று பார்வையிட்டனர். அதில், உஷா நேரடியாக வீட்டில் உள்ள பூஜை அறையை சுட்டிக் காட்டினார்.

அங்கு சிமெண்டால் மூடப்பட்டிருந்த நிலத்தில் தோண்டியபோது, 2-3 அடியில் மனித எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டன. டி.என்.ஏ பரிசோதனையில், அந்த எலும்புகள் அவரது தந்தை லட்சுமணின் உடலே என உறுதி செய்யப்பட்டது.

விசாரணையில், 2010ஆம் ஆண்டு கங்கம்மா மற்றும் அவரது காதலர் ஜகதீஷ் இணைந்து, குடும்பத் தகராறின் போது லட்சுமணை தலையணை மூடி கொலை செய்ததாக தெரியவந்தது. பின்னர், பூஜை அறையில் உடலை புதைத்து, வெளியே யாரும் சந்தேகிக்காமல் வழிபாடுகளும் தொடர்ந்து நடத்தப்பட்டது.

அப்போது 9ம் வகுப்பில் படித்து வந்த உஷா, தன்னுடைய தம்பிக்கு கவனிக்க யாரும் இருக்க மாட்டார்கள் என்ற பயத்தில், தனது அம்மாவைக் கைது செய்ய யாரிடமும் புகார் செய்யாமல் இருந்தார். ஆனால் மனவலியில் கூச்சமின்றி பல வருடங்களுக்குப் பிறகு, அவர் வெளியே வந்ததைத் தொடர்ந்துதான் இந்த கொலை வாடி வெளிச்சம் பார்த்தது.

இந்த வழக்கில் 34 பேர் சாட்சியாகவும், 40 ஆவண ஆதாரங்களும், டி.என்.ஏ சான்றுகளும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன. 2025 ஜூலை 14ஆம் தேதி, தவனகிரே கூடுதல் அமர்வு நீதிமன்றம் கங்கம்மா மற்றும் ஜகதீஷுக்கு ஆயுள் தண்டனை விதித்தது.

“வழிபாட்டு அறையில் ஒருவரை புதைக்கும் அளவுக்கு கொடூரம் கொண்டவர்கள் எதையும் செய்ய தயங்க மாட்டார்கள்” என்று நீதிபதி கடுமையாக விமர்சித்தார். சோகமாக, நீதி கிடைத்த அந்த நாளை உஷா காணவில்லை. 2020ஆம் ஆண்டு ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தார். தற்போது அவரது தம்பி மட்டும் அந்த ஊரில் வாழ்ந்து வருகிறார்.

இந்த வழக்கு, குடும்பத்தில் கூட எவ்வளவு கொடூரம் ஒளிந்து கிடக்க முடியும் என்பதை உணர்த்துவதோடு, ஒரு மகளின் தைரியத்தால் எவ்வளவு பெரிய சத்தியமும் வெளிக்கோண முடியும் என்பதையும் நமக்குக் கற்றுத் தருகிறது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.