14 தமிழ்நாடு மீனவர்களை சிறை பிடித்து இலங்கை கடற்படை அராஜகம்.
தமிழகத்தைச் சேர்ந்த ராமேஸ்வரம் 14 மீனவர்கள், கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த போது இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்கள் எல்லைத் தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி, இலங்கை கடற்படை அங்கு சென்று இளைஞர்களை பிடித்து காங்கேசன் கடற்படை முகாமுக்கு அழைத்து சென்றுள்ளனர். தற்போது கைது செய்யப்பட்ட மீனவர்களுக்கு எதிராக விசாரணை நடைபெற்று வருகிறது. தொடர்ந்து இந்த மாதிரியான கடற்படை நடவடிக்கைகள் தமிழக மீனவர்களில் பெரும் பயத்தை ஏற்படுத்தியுள்ளன.