தேமுதிகவின் மக்கள் உரிமை மீட்பு மாநாடு 2.0 .. தேதியை அறிவித்த பிரேமல்தா
Webdunia Tamil August 26, 2025 08:48 AM

தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் மாநில மாநாடு, அடுத்த வருடம் ஜனவரி மாதம் 9-ஆம் தேதி கடலூர் மாவட்டம், பாசார் கிராமத்தில் உள்ள பத்மநாதன் தோட்டம், விஜயகாந்த் திடலில் நடைபெற உள்ளது. கட்சியின் தலைவர் திருமதி. பிரேமலதா விஜயகாந்த் இந்த மாநாட்டின் தலைமை ஏற்று நடத்த இருக்கிறார்.

இந்த மாநாடு 'மக்கள் உரிமை மீட்பு மாநாடு 2.0' என்ற தலைப்பில் நடைபெற உள்ளது. இதில், கட்சியின் முக்கிய நிர்வாகிகள், மாவட்டத் தலைவர்கள், ஒன்றிய, நகர, பகுதி, பேரூர், வட்ட, கிளைக் கழகத் தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் பெருந்திரளாக கலந்துகொள்ள வேண்டும் என அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த மாநாடு கட்சியின் எதிர்காலத் திட்டங்கள் மற்றும் மக்கள் நலன் சார்ந்த முக்கிய முடிவுகளை அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மாநாடு ஜனவரி 9, 2026 அன்று மாலை 2:45 மணிக்குக் கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளது. இந்த மாநாடு தேமுதிக தொண்டர்கள் மத்தியில் பெரும் எழுச்சியைக் கொண்டுவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Edited by Siva

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.