பிரேசிலைச் சேர்ந்த தைனா என்ற பெண், குஜராத்தைச் சேர்ந்த ஒரு இந்திய இளைஞரை திருமணம் செய்த பிறகு, இந்திய கலாசாரத்தை தழுவ முயன்றபோது நடந்த ஒரு வேடிக்கையான சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இந்திய பாரம்பரியத்தைப் பற்றி தன் கணவரிடம் கேள்விப்பட்ட தைனா, ஒரு விருந்தில் நடந்த தவறால் அனைவரையும் சிரிக்க வைத்தார். இந்த வீடியோவை பார்த்தவர்கள் தங்கள் சிரிப்பை அடக்க முடியவில்லை.
தைனா தனது இன்ஸ்டாகிராம் பக்கமான @tainashah-ல் இந்த சம்பவத்தை வீடியோவாக பகிர்ந்துள்ளார், இது 85 லட்சத்துக்கும் மேற்பட்ட பார்வைகளையும், 2.77 லட்சத்துக்கும் மேற்பட்ட லைக்குகளையும் பெற்றுள்ளது.
View this post on Instagram
A post shared by Tainá Shah (@tainashah)
தைனாவின் கணவர், இந்தியாவில் பெரியவர்களுக்கு மரியாதை செய்யும் விதமாக அவர்களது பாதங்களைத் தொடுவது பற்றி கூறியிருந்தார். இது தைனாவுக்கு மிகவும் பிடித்துவிட்டது. ஒரு விருந்துக்கு தன் கணவருடன் சென்றபோது, அங்கு இருந்த 20 குஜராத்தி பெரியவர்களை ஒவ்வொருவராக “ஜெய் ஸ்ரீ கிருஷ்ணா” சொல்லி, அவர்களது பாதங்களைத் தொட்டு மரியாதை செய்ய ஆரம்பித்தார்.
இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அவரது கணவர், “என்ன செய்கிறாய்?” என்று கேட்க, தைனா பெருமையுடன், “பெரியவர்களுக்கு மரியாதை செய்கிறேன்” என்று பதிலளித்தார்.
ஆனால், இதை நெருங்கிய குடும்ப உறுப்பினர்களுக்கு மட்டுமே செய்ய வேண்டும் என்று கணவர் விளக்க, தைனாவுக்கு தன் தவறு புரிந்து வெட்கப்பட்டார்.
இந்த வேடிக்கையான தவறு, அவர் இந்திய கலாசாரத்தை இன்னும் கற்றுக்கொண்டு வருவதை காட்டுவதாக அமைந்தது, மேலும் இந்த வீடியோவுக்கு ரசிகர்களின் கமெண்ட்டுகளும் சிரிப்பை வரவழைக்கின்றன.