சமீபத்தில் நடைபெற்ற துணை ஜனாதிபதி தேர்தலில், தேசிய ஜனநாயக கூட்டணியின் வேட்பாளர் சி.பி. ராதாகிருஷ்ணன் வெற்றி பெற்றார். இந்த வெற்றி இந்தியா கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. காரணம், இந்தியா கூட்டணியின் வேட்பாளராக ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி சுதர்சன ரெட்டி போட்டியிட்ட நிலையில், இந்தியா கூட்டணியை சேர்ந்த 14 எம்பிக்கள் சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு வாக்களித்ததாகக்கூறப்படுவதுதான்.
இந்த தேர்தலில் மொத்தம் 767 எம்பிக்கள் வாக்களித்தனர். இதில் 15 வாக்குகள் செல்லாததாக அறிவிக்கப்பட்டன. தேசிய ஜனநாயக கூட்டணிக்கு, அதன் கூட்டணி கட்சிகளை சேர்ந்த எம்பிக்களின் வாக்குகளை விட 14 வாக்குகள் அதிகமாக கிடைத்துள்ளன. இந்த 14 வாக்குகள் எங்கிருந்து வந்தன என்ற கேள்வி எழுந்துள்ளது. இதனால், இந்தியா கூட்டணியை சேர்ந்த எம்பிக்கள் சிலர் பாஜக வேட்பாளருக்கு வாக்களித்திருக்க வேண்டும் என்று அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர்.
இந்த நிகழ்வு, "இந்தியா" கூட்டணியின் ஒற்றுமை குறித்து கேள்விகளை எழுப்பியுள்ளது. எதிர்வரும் தேர்தல்களுக்கு முன், இந்த கூட்டணிக்குள் ஏற்பட்ட இந்த பிளவு ஒரு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
Edited by Mahendran