செப்டம்பர் 15 முதல் மைசூர் - திருநெல்வேலி, காரைக்குடி இடையே வாராந்திர சிறப்பு ரயில்கள்!
Dinamaalai September 14, 2025 09:48 PM


 
தசரா, தீபாவளி மற்றும் சத் பண்டிகைகள் கொண்டாடப்பட உள்ளன. இந்த பண்டிகைகளின்போது, கூட்ட நெரிசலைத் தவிா்க்கும் வகையில் மைசூா்-திருநெல்வேலி மற்றும் காரைக்குடி இடையே வாராந்திர சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என ரயில்வே வாரியம் அறிவித்துள்ளது.இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்  மைசூரிலிருந்து  செப்டம்பர் 15ம் தேதி  திங்கட்கிழமை முதல் நவம்பர்  24ம் தேதி வரை திங்கட்கிழமைதோறும் காலை 8.15 மணிக்கு புறப்படும் வாராந்திர சிறப்பு ரயில் (எண் 06239) மறுநாள் செவ்வாய்க்கிழமை செப்டம்பர் 16ம் தேதி காலை 11.30 மணிக்கு திருநெல்வேலியை வந்தடையும்.

மறுமாா்க்கத்தில் திருநெல்வேலியிலிருந்து செவ்வாய்க்கிழமை செப்டம்பர் 16 ம் தேதி  முதல் நவம்பர் 25ம் தேதி வரை ஒவ்வொரு வாரமும்  செவ்வாய்க்கிழமைகளில் பிற்பகல் 3.40 மணிக்குப் புறப்படும் வாராந்திர சிறப்பு ரயில் (எண் 06240) புதன்கிழமைகளில்  காலை 5.40 மணிக்கு மைசூா் நிலையத்தை அடையும்.
இந்த ரயில் கோவில்பட்டி, சாத்தூா், மதுரை, கொடைரோடு சந்திப்பு, திண்டுக்கல், கரூா், நாமக்கல், சேலம் ரயில் நிலையங்களில் நின்று செல்லும். மைசூரிலிருந்து செப்டம்பர் 18ம் தேதி  முதல் நவம்பர் 29ம் தேதி  வரை வியாழன் மற்றும் சனிக்கிழமை என இருவார சிறப்பு ரயில் (எண் 06243) இரவு 11.20 மணிக்குப் புறப்பட்டு வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 11 மணிக்கு காரைக்குடி சென்றடையும்.


காரைக்குடியிலிருந்து செப்டம்பர்  19 முதல் நவம்பர்  30ம் தேதி வரை வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மாலை 6.45 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில்  மறுநாள்களான சனி, திங்கள்கிழமைகளில் காலை 7.45 மணிக்கு மைசூா் சென்றடையும். இந்த ரயில் புதுக்கோட்டை, திருச்சி, கரூா், நாமக்கல் சேலம் ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

ராமநாதபுரத்துக்கு  மைசூரிலிருந்து திங்கட்கிழமை செப்டம்பர் 15ம் தேதி  முதல் அக்டோபர்  27ம் தேதி வரை திங்கட்கிழமைகளில்  மாலை 6.35 மணிக்கு புறப்படும் வாராந்திர சிறப்பு ரயில்  செவ்வாய்க்கிழமை காலை 10 மணிக்கு ராமநாதபுரத்தை வந்தடையும். மறுமாா்க்கத்தில் ராமநாதபுரத்திலிருந்து செவ்வாய்க்கிழமை செப்டம்பர்  16ம் தேதி  முதல் அக்டோபர்  28 வரை செவ்வாய்க்கிழமை  பிற்பகல் 3.10 மணிக்குப் புறப்படும் வாராந்திர சிறப்பு ரயில் (எண் 06238) மறுநாள் புதன்கிழமை மைசூரு நிலையத்தை சென்றடையும். இந்த ரயில் பரமக்குடி, மானாமதுரை, மதுரை, திண்டுக்கல், கரூா், நாமக்கல், சேலம், தர்மபுரி, ஓசூா் ரயில்  நிலையங்களில் நின்று செல்லும் எனத்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.