“வயிறு வலிப்பதாக சொன்ன 16 வயது சிறுமி”… டாக்டரிடம் சென்ற பெற்றோருக்கு தலையில் இடியாய் விழுந்த செய்தி… 31 வயது வாலிபர் கைது… உறைய வைக்கும் சம்பவம்..!!!!
SeithiSolai Tamil September 21, 2025 12:48 AM

தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமிக்கு வயிற்றுவலி இருப்பதாகக் கூறியதை அடுத்து, அவரது பெற்றோர் அவரை தஞ்சை அரசு ராசா மிராசுதாரர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு மருத்துவர்கள் சிறுமியைப் பரிசோதித்தபோது, அவர் இரண்டு மாத கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. இந்த தகவல் சிறுமியின் பெற்றோருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து, சமூகநலத்துறை அலுவலர்கள் ஒரத்தநாடு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

புகாரின் பேரில் ஒரத்தநாடு அனைத்து மகளிர் காவல்துறையினர் சிறுமியிடம் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், ஒரத்தநாடு செம்மண்குட்டை பகுதியைச் சேர்ந்த சேகரின் மகன் 31 வயதான அன்பழகன் என்பவர், சிறுமியை காதலிப்பதாகக் கூறி அவரை ஏமாற்றி கர்ப்பமாக்கியது தெரியவந்தது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக ஒரத்தநாடு அனைத்து மகளிர் காவல்துறையினர், போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து, குற்றவாளியான அன்பழகனை கைது செய்தனர். தற்போது அவர் மீது தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.