தீபாவளி கொண்டாட்டம்... நாடு முழுவதும் 12,000 சிறப்பு ரயில்கள் இயக்கம்!
Dinamaalai October 17, 2025 01:48 PM

நாடு முழுவதும் தீபாவளி மற்றும் சாத் பண்டிகை விடுமுறையை முன்னிட்டு பொதுமக்களின் வசதிக்காக கூட்ட நெரிசலை குறைக்கும் வகையில் 12,000 சிறப்பு ரயில்களை இயக்கப்படுவதாக ஒன்றிய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.

இது குறித்து செய்தியாளர்களிடம் கூறிய அவர், “தீபாவளிக்கான இந்த 12,000 சிறப்பு ரயில்களின் மூலம் கூடுதலாக 3 கோடி பேர் பயணம் செய்யலாம். இது, ஆஸ்திரேலியாவின் மக்கள் தொகையை விட அதிகமாகும். இந்த சிறப்பு ரயில்கள் 45 நாட்களுக்கும் மேலாக இயக்கப்படும்.

தவிர கடைசி நேர நெரிசலை தவிர்க்க முன்பதிவு தேவையில்லாத முற்றிலும் பொது பெட்டிகளை கொண்ட 150 ரயில்கள் தயார் நிலையில் வைக்கப்படும். கடந்த 23ம் தேதி வரை 10,000 சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. தேவையின் அடிப்படையில் கூடுதல் ரயில்கள் அறிவிக்கப்படும். 70 ரயில்வே கோட்டங்களில் 29ல் 90 சதவீதத்திற்கு மேல் நேரம் தவறாமை எட்டப்பட்டுள்ளது. வந்தே பாரத் படுக்கை வசதி கொண்ட ரயில் தயார் நிலையில் உள்ளது. என்றார்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.