அடேங்கப்பா தில்லு தான்யா…. முதலைக்கு கையால் உணவு கொடுத்து…. வைரலாகும் ஆச்சரிய வீடியோ….!!
SeithiSolai Tamil October 18, 2025 04:48 AM

சமூக வலைதளத்தில் வெளியான ஒரு காணொளியில் ஒருவர் முதலைக்கு உணவு கொடுத்து, பிறகு அன்பாக தலையில் தடவும் வீடியோ இணையத்தில் பரவி, எல்லோரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. வீடியோவில், ஒரு பெரிய முதலை ஏரியில் இருந்து வெளியே வந்து, மனிதரின் அருகில் செல்கிறது. அந்த மனிதர் முதலையை அழைத்து, மாமிசத் துண்டுகளை உணவாக கொடுக்கிறார். அதன் பிறகு, முதலையின் தலையை மென்மையாக தடவுகிறார். ஆச்சரியமாக, முதலை அமைதியாகி, கண்களை மூடிக்கொள்கிறது, அவரை அறிந்தவர் போல நடந்து கொள்கிறது. மனிதரின் முகத்தில் பயம் துளியும் இல்லை. இந்த வீடியோ X இல் @AMAZlNGNATURE என்ற பக்கத்தில் பதிவிடப்பட்டு, “பதிவு செய்தவருக்கு கண்களையே நம்ப முடியவில்லை” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 28 வினாடிகள் கொண்ட இந்த வீடியோவை 3.33 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் பார்த்து, 2500க்கும் மேற்பட்ட லைக்குகள் கிடைத்துள்ளன.

இந்த வீடியோவைப் பார்த்தவர்கள், “இந்த மனிதர் சிங்கத்தைப் போல தைரியமானவர்” என்று புகழ்கிறார்கள். ஒருவர், “முதலை திடீரென திரும்பி தாக்கினால் ஒரே நொடியில் எல்லாம் முடிந்துவிடும்” என்று எச்சரிக்கிறார். சிலர் வேடிக்கையாக, “இந்த முதலை சைவ உணவு மட்டுமே சாப்பிடுவது போல இருக்கிறது” என்று கமெண்ட் செய்கிறார்கள். முதலைகள் ஆபத்தானவை, எதையும் வேட்டையாடக் கூடியவை என்று அறியப்பட்டாலும், இந்த மனிதரின் தைரியமும் அன்பான செயலும் எல்லோரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.