மருமகளைத் தீ வைத்துக் கொன்ற மாமியார்: ஜார்க்கண்ட் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துத் தீர்ப்பு!
WEBDUNIA TAMIL October 20, 2025 03:48 AM

ஜார்க்கண்ட் மாநிலத்தில் மருமகளை கொடூரமாக கொலை செய்த 60 வயது மாமியாருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

கவிதா தேவி என்ற பெண்ணுக்கும் அவரது மாமியாருக்கும் இடையே தகராறு நடந்ததாக தெரிகிறது. தகராறுக்கு பிறகு, கவிதா வைக்கோல் வைக்கப்பட்டிருந்த தனது வீட்டிற்கு திரும்பியுள்ளார். அப்போது, அவரது மாமியார் அனிதா தேவி அங்கு வந்து தீ வைத்ததாகவும், அதனால் தனது சேலையில் தீப்பிடித்ததாகவும் அவர் உதவிக்காக கதறியும் யாரும் காப்பாற்ற வரவில்லை என்றும் அவர் மரண வாக்குமூலத்தில் பதிவு செய்திருந்தார்.

பின்னர், சிலரால் தீ அணைக்கப்பட்டாலும், கவிதா தேவி தனது பலத்த தீக்காயங்களால் உயிரிழந்தார். இந்த வழக்கில், 2025 மார்ச் 10 அன்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டதை தொடர்ந்து, நீதிமன்றம் துரித விசாரணை நடத்தி தற்போது தீர்ப்பை வழங்கியுள்ளது.

தீர்ப்பில் குற்றவாளியான அனிதா தேவிக்கு ஆயுள் தண்டனையுடன் ₹10,000 அபராதமும் விதித்துள்ளது. அபராதத் தொகையை செலுத்த தவறினால், கூடுதலாக இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனையை எதிர்கொள்ள நேரிடும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Edited by Siva

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.