தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இன்று முதல் நவம்பர் 14ம் தேதி வரையில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இன்று தமிழகத்தின் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சென்னையில் இன்று இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. கடல் பகுதிகளில் அலைகள் சாதாரணமாக இருக்கும் நிலையில், மீனவர்கள் கடலுக்கு செல்ல தடையில்லை எனவும் தகவல் கூறப்பட்டுள்ளது.

நாளை மறுநாளில் இருந்து மழை தீவிரம் அதிகரிக்கும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. திருநெல்வேலி, கன்னியாகுமரி, நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, தென்காசி உள்ளிட்ட பகுதிகளில் நாளை மறுநாள் கனமழை பெய்யக்கூடும். இதனுடன் தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், விருதுநகர், தூத்துக்குடி மாவட்டங்களில் நாளை மறுநாளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

அதேபோல் வரும் நவம்பர் 13ம் தேதி வியாழக்கிழமை கோவை, நீலகிரி, திண்டுக்கல், தேனி, தென்காசி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் கனமழை பெய்யும் என கணிக்கப்பட்டுள்ளது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை
ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!