ஜெருசலேம் புனித பயண மானியம் பெற விண்ணப்பிக்கலாம்... தமிழக அரசு அறிவிப்பு!
Dinamaalai November 16, 2025 12:48 PM

ஜெருசலேம் புனித பயணம் மேற்கொண்டு திரும்பிய கிறிஸ்தவர்களுக்கு தமிழக அரசு வழங்கி வரும் மானியத் திட்டத்திற்கான புதிய சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. கடந்த காலத்தில் இந்தப் பயணத்தை மேற்கொண்ட 550 கிறிஸ்தவர்களுக்கு தலா ரூ.37 ஆயிரம் மானியமாக வழங்கப்பட்டு வருகிறது. இதனுடன் 50 கன்னியாஸ்திரிகள் மற்றும் அருட்சகோதரிகளுக்கு தலா ரூ.60 ஆயிரம் ‘இ.சி.எஸ்.’ முறையில் நேரடியாக வழங்கப்படும் என்றும் அரசு தெரிவித்துள்ளது.

மொத்தம் 600 கிறிஸ்தவர்கள் பயனடையும் வகையில் அமைக்கப்பட்டுள்ள இந்தத் திட்டத்திற்கான விண்ணப்பங்கள் தற்போது வரவேற்கப்படுகின்றன. குறிப்பாக, இந்த மாதம் 1ம் தேதி முதல் ஜெருசலேம் புனித பயணம் மேற்கொண்ட கிறிஸ்தவ மதத்தினர் அனைவரும் விண்ணப்பிக்கலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

விண்ணப்பப் படிவங்கள் மாவட்ட கலெக்டர் அலுவலகங்களின் கீழ் செயல்படும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகங்களில் இலவசமாக வழங்கப்படுகின்றன. மேலும் சிறுபான்மையினர் நல அலுவலகங்களிலும் இதனைப் பெறலாம். அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்ய விரும்புவோர் http://www.bcmbcmw.tn.gov.in தளத்தில் இருந்து படிவத்தை பெற்றுக்கொள்ளலாம்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் தேவையான ஆவணங்களுடன் சேர்த்து, ஆணையர், சிறுபான்மையினர் நலத்துறை, கலசமஹால் பாரம்பரிய கட்டிடம், முதல் தளம், சேப்பாக்கம், சென்னை - 600005 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும். விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கும் கடைசி நாள் அடுத்த ஆண்டு பிப்ரவரி 28 என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விவரங்கள் தமிழக சிறுபான்மையினர் நல ஆணையர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளன.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.