பொதுவாக சிலருக்கு உதடுகள் கருமையாக இருக்கும், இன்னும் சிலருக்கு உதடுகள் வறண்டு இருக்கும். இது ஒரு சில ஊட்டச்சத்து குறைபாடுகள் மற்றும் சில பழக்கங்களால் ஏற்படுகிறது.இந்த கருமையான உதட்டை சிவப்பாக மாற்ற சில இயற்கையான வழிகள் உண்டு .அது பற்றி நாம் இந்த பதிவில் பார்க்கலாம்
1.சிலருக்கு உதடுகள் வறண்டு இருக்கும் .இப்படி வறண்ட உதடுகளைக் கொண்டவர்கள் நாள்தோறும் உதடுகளின்மேல் வெண்ணெய் தடவி வந்தால் வறண்ட உதடுகள் மாறி வழவழப்பான அழகான உதடாகும்.
2.சிலருக்கு உதடுகள் கருப்பாக இருக்கும் .கொத்துமல்லி இலைகளின் சாற்றை எடுத்து தினமும் இரவு படுக்கைக்குச் செல்லும்முன் உதடுகளில் தடவி வந்தால் உதடு சிவப்பாகும்.
3.தேங்காய் எண்ணெய் சிவப்பு உதட்டுக்கு உதவும் .தேங்காய் எண்ணெயில் அரை டீஸ்பூன் சாதிக்காய் பொடியைச் சேர்த்து குழைத்து உதடுகளின் மேல் தடவி வந்தால் உதடுகள் சிவந்து, பளபளப்பாக காட்சியளிக்கும்.
4.பீட்ரூட் சிவப்பு உதட்டுக்கு உதவும் .பீட்ரூட் பழத்தின் சாற்றை உதடுகளின் மீது பூசி வந்தால் உதடுகள் அழகாகும்.
5.மாதுளம் பழத்தின் சாறும் உதடுகளை அழகாக்கும்.இந்த சாறை உதட்டின் மேல் பூசலாம்
6.பெட்ரோலியம் ஜெல்லி உதடுகளை மென்மையாக்க உதவும் மிக சிறந்த பொருளாகும்.
7. தினசரி பெட்ரோலியம் ஜெல்லியை உதடுகளில் தடவி வந்தால் உதடுகள் மென்மையாக மாறும்.
8. வாரம் இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு உதடுகளை வெதுவெதுப்பான மற்றும் குளிர்ந்த தண்ணீரால் ஒத்தடம் கொடுத்து வந்தால் அவை ரோஜா போல மென்மையாக மாறும்.
9.உதடுகளைக் கடிக்கும் பழக்கம் சிலருக்கு உண்டு. அது தவிர்க்கப்படவேண்டிய பழக்கம். இதனால் உதடுகள் பாதிப்பு அடைய வாய்ப்புண்டு
10.மேலும் உதடுகள் வறண்டு போகவும், நிறம் மாறி அசிங்கமாகக் காட்சியளிக்கவும் கூடும். எனவே இது தவிர்க்கப்பட வேண்டும்.