“ஜாக்கிரதை…. இங்கே எது வேணாலும் நடக்கலாம்” மனநல மருத்துவமனையில் பகீர் சம்பவம்…. வைரலாகும் வீடியோ….!!
SeithiSolai Tamil January 10, 2026 11:48 AM

மனநல மருத்துவமனை ஒன்றில் எதிர்பாராத விதமாக நடந்த ஒரு தாக்குதல் சம்பவம் தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில், ஒருவர் மருத்துவமனையின் வரவேற்பு பகுதியில் உள்ள நாற்காலியில் அமைதியாக அமர்ந்திருக்கிறார். அப்போது அவருக்குப் பின்னால் இருந்து வந்த ஒரு மனநோயாளி, திடீரென மின்னல் வேகத்தில் அந்த நபரை நோக்கிப் பாய்ந்து, அவரது கன்னத்தில் ஓங்கி ஒரு அறை விடுகிறார். சற்றும் எதிர்பாராத இந்தத் தாக்குதலால் நிலைகுலைந்து போன அந்த நபர் அதிர்ச்சியில் உறைந்து போகிறார்.

இந்த வீடியோவை சமூக வலைதளங்களில் பகிரும் நெட்டிசன்கள், மனநல மருத்துவமனைகளில் இருக்கும்போது எவ்வளவு விழிப்புடன் இருக்க வேண்டும் என்பதைப் பற்றிப் பல்வேறு கருத்துக்களைப் பகிர்ந்து வருகின்றனர். “மனநல பாதிப்பு உள்ளவர்கள் எப்போது எப்படி நடந்துகொள்வார்கள் என்று கணிக்க முடியாது, எனவே அங்கு செல்பவர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்” என்று பலரும் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர். பாதுகாப்பு குறைபாடுகள் குறித்தும், நோயாளிகளைக் கண்காணிப்பதில் இருக்கும் அலட்சியம் குறித்தும் இந்த வீடியோ விவாதத்தைக் கிளப்பியுள்ளது.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.