“பெத்தவங்க வேண்டாம் வீடு மட்டும் வேணுமா?”.. முதிய தம்பதியின் வழக்கில் அதிரடி தீர்ப்பு.. மகன்களுக்கு நீதிபதி வைத்த செக்..!!!
SeithiSolai Tamil January 12, 2026 04:48 AM

செகந்திராபாத்தைச் சேர்ந்த 71 மற்றும் 66 வயதுடைய முதிய தம்பதியினர், தங்களை 4 மகன்களும், மருமகள்களும் கொடுமைப்படுத்துவதாகக் கூறி நீதிமன்றத்தை நாடினர்.

அவர்கள் தங்களின் மூன்று அடுக்கு மாடி வீட்டில் இருந்து பிள்ளைகளை வெளியேற்றக் கோரினர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி டி. மாதவி தேவி, மூத்த மகன் மற்றும் அவரது மனைவிக்கு அதிரடி உத்தரவு ஒன்றைப் பிறப்பித்துள்ளார்.

அந்த உத்தரவில், மூத்த மகன் தனது பெற்றோருக்கு மாதம் 6,000 ரூபாய் பராமரிப்புத் தொகையை வழங்க வேண்டும் என்றும், குறிப்பாகப் படுக்கையிலேயே இருக்கும் தனது தாயாரை மிகவும் கவனமாகப் பார்த்துக் கொள்ள வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

அந்த வீட்டின் கட்டுமானத்தில் பிள்ளைகளின் பங்களிப்பு இருப்பதால் அவர்களை உடனடியாக வெளியேற்ற முடியாது என்றாலும், பெற்றோரைச் சரியாகக் கவனிக்கத் தவறினால் அந்த வீட்டில் தொடர்ந்து வசிக்கும் உரிமையை அவர்கள் இழப்பார்கள் என நீதிபதி எச்சரித்துள்ளார்.

“பிள்ளைகள் பெற்றோரைப் பேணுவது என்பது வெறும் தார்மீகக் கடமை மட்டுமல்ல, அது சட்டப்படியான கட்டாயம்” என்பதை இந்தத் தீர்ப்பு மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.