சபரிமலை ஐயப்பன் கோயிலில் பங்குனி உத்திர ஆராட்டு விழா ஏப்ரல் 1ல் பங்குனி உத்திர நாளில் நடைபெறும்.விழாவை முன்னிட்டு மார் 23 ல் கொடியேற்றத்துடன் பத்து நாள் திருவிழா தொடங்கியது.
உலகப் பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல மகர விளக்கு காலங்களிலும், தமிழ் மாதங்களிலும் கோயில் நடை திறக்கப்படுவது வழக்கம். அப்போது லட்சக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து செல்கின்றனர்.
இந்த நிலையில், தற்போது பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு மார்ச் 22 மாலை 5 மணியளவில் தந்திரி மற்றும் மேல்சாந்தி முன்னிலையில் கோயில் நடை திறக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து மார்ச் 23(இன்று) காலை கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகின்றது. தொடர்ந்து 10 நாள்கள் சிறப்புப் பூஜைகள் மற்றும் விழாக்கள் நடைபெறவுள்ளன.
பங்குனி உத்திர திருவிழா சபரிமலையில் மிகவும் முக்கியமான ஒன்றாகக் கருதப்படுகிறது. இந்த விழா காலத்தில் தினமும் சிறப்பு பூஜைகள், அபிஷேகம் மற்றும் அலங்காரங்கள் நடைபெறும். மேலும், திருவிழாவின் நிறைவு நாளாக ஏப்ரல் 1 ஆம் தேதி பம்பைக் கரையில் ஐயப்பனுக்கு ஆராட்டு விழா நடைபெற உள்ளது.
பக்தர்கள் தங்குவதற்கு வசதியாக முன்பதிவு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தரிசனத்திற்கு ஆன்லைன் முன்பதிவு செய்ய தேவஸ்வம் வாரியம் அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. தங்கம் அறைகள், முன்பதிவுக்கு sabarimala.org.in www.onlinetdb.com ஆகிய இணையதளங்களை பயன்படுத்திக்கொள்ளலாம்.
பங்குனி உத்திர திருவிழாவிற்கு அதிகமான பக்தர்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால், பாதுகாப்பு ஏற்பாடுகள், போக்குவரத்து வசதிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகக் கேரள அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சபரிமலையில் தற்போது கோடை காலம் என்பதால் கடுமையான வெயில் வறுத்தெடுத்து வருகிறது தினமும் 42 டிகிரிக்கு மேல் வெயில் பாட்டில் எடுத்து வருகிறது பம்பை நதியில் போதிய தண்ணீர் இல்லை ஆராட்டு விழா நடைபெறுவதை ஒட்டி பம்பை நதியில் தண்ணீர் சபரி அணையில் இருந்து திறந்து விட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது
சபரிமலை ஐயப்பன் கோயில் ஆராட்டு விழா ஏப்ரல் 1இல்.. News First Appeared in Dhinasari Tamil