பரபரக்கும் விஜய் டிவி சீரியல்கள்…. டாப் சீரியல்களில் நடக்க இருக்கும் மாஸ் அப்டேட்!!
CineReporters Tamil April 18, 2026 11:48 PM

Vijay TV: விஜய் தொலைக்காட்சி கடந்த சில மாதங்களாகவே டிஆர்பியில் சிக்கி கொண்டு இருக்கும் நிலையில் அதை சரி செய்யும் விதமாக டாப் சீரியலின் கதைக்களமே மாற்றப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. 

சிறகடிக்க ஆசை எப்போதுமே பரபரப்பாக இருக்கும் இந்த சீரியல் கடந்த சில மாதங்களாகவே டல்லடித்து வந்தது. ரோகிணி மீண்டும் வீட்டுக்கு வர வாய்ப்பு இருக்கிறது. மனோஜ் திருமணம் செய்ய ப்ளான் போடுகிறார் என நீதிமன்ற படியேறி ரோகிணி இதை சாதிக்கலாம்.

தொடர்ந்து சிந்தாமணிக்கும் மீனாக்கும் இருக்கும் பிரச்சனையை தாண்டி ரேகா சத்யா கல்யாணம் நடக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் மீண்டும் சிறகடிக்க ஆசை பரபரப்பாகலாம். 

மகாநதி சீரியலில் காவேரிக்கு எல்லாம் மறந்து விட்ட நிலையில் விஜய் அவருக்கு மீண்டும் நியாபகத்தை கொண்டு வர போராடுகிறார். ஆனால் காவேரி அவருக்கு பெண் பார்த்து கடுப்பேத்து கொண்டு இருக்கிறார். இந்நிலையில் சின்ன காவேரி படிக்கும் பள்ளியில் அன்னையர் தினம் நடக்க இருக்கிறது. 

இதனால் அம்மா பிரச்சனையை பெரிதாக்கி அப்போது உண்மையை விஜய் உடைக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அய்யனார் துணை சீரியலில் சோழன் நிலாவுக்கு காதல் இன்னும் சில எபிசோட்களில் தொடங்கி விடும் என்றும் தகவல்கள் தெரிவிக்கிறது. 

பாண்டியன் ஸ்டோர்ஸ்2 சீரியலில் மயிலை துரத்தி விட்ட நிலையில் தற்போது அவர் கர்ப்பம் வீட்டினருக்கு தெரிந்துவிட்டது. சரவணனுக்கு இன்னொரு ஜோடியும் அறிமுகமாகி விட்ட நிலையில் இந்த பிரச்சனை பெரிதாக என்ன நடக்கும் என்பதே பரபரப்பாக மாறி இருக்கிறது. 

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.