தங்கத்தின் விலையானது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் தங்கத்தின் மீது முதலீடு செய்தால் எப்போதும் நஷ்டம் ஏற்படாது என்ற காரணத்தால் தங்கத்தை மக்கள் அதிகளவு வாங்கி வருகிறார்கள். இதன் காரணமாக நகைக்கடைகளில் எப்போதும் மக்களின் கூட்டமானது நிரம்பி வழிகிறது. அதே நேரம் கடந்த 2021ஆம் ஆண்டு ஒரு சவரன் 40 ஆயிரம் முதல் 45 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையான தங்கத்தின் விலையானது அடுத்த 4 வருடத்தில் 1.34 லட்சத்தை எட்டி நகைப்பிரியர்களை தலை சுற்ற வைத்துள்ளது.
உலக நாடுகளில் ஏற்படும் பொருளாதார பாதிப்பு காரணமாக பங்கு சந்தைகள் ஏற்றம் இறக்கமாக காணப்படுகிறது. எனவே பங்கு சந்தைகளில் முதலீடு செய்வது பாதுகாப்பில்லாத ஒன்று என்ற காரணத்தால் முதலீட்டாளர்கள் தங்கத்தின் மீது முதலீட்டை அதிகரித்ததனர். மேலும் டாலருக்கு இணையாக தங்கள் நாட்டின் பண மதிப்பை அதிகரிக்கவும் தங்கத்தை டன் கணக்கில் தங்கத்தை மத்திய வங்கிகள் வாங்கி குவித்தது. இதன் காரணமாக தங்கத்தின் விலையானது புதிய உச்சத்தை தொட்டது. அதே நேரம் ஈரான்- அமெரிக்கா போர் காரணமாக உலக நாடுகளில் கச்சா எண்ணெய் தட்டுப்பாடு ஏற்ப்பட்டது. இதனையடுத்து கச்சா எண்ணெய் மீது முதலீடு முதலீட்டாளர்களின் பார்வை திரும்பியதால் தங்கத்தின் விலையானது குறைய தொடங்கியது.
தங்கத்தின் விலையானது குறைந்ததால் நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்த நிலையில், தற்போது போர் முடிவிற்கு வந்ததால் ஹார்மூஸ் ஜலசந்தி திறக்கப்பட்டுள்ளது. இதனால் கச்சா எண்ணெய் மீது முதலீடு செய்த முதலீட்டாளர்கள் தற்போது தங்கத்தின் மீது தங்களது பார்வையை திருப்பியுள்ளனர். இதனால் தங்கம் விலையானது உயர தொடங்கியுள்ளது.
வாரத்தின் முதல் நாளான நேற்று தங்கம் விலையானது புதிய உச்சத்தை தொட்ட நிலையில், இன்று தங்கத்தின் விலையானது சற்று குறைந்துள்ளது. அந்த வகையில் இன்று கிராம் ஒன்றுக்கு 10 ரூபாய் குறைந்து 14.060 ரூபாய்க்கும், சவரனுக்கு 80 ரூபாய் குறைந்து 1,11,480 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
இதே போல வெள்ளியின் விலையும் குறைந்துள்ளது. கிராம் ஒன்றுக்கு 5 ரூபாய் குறைந்து 275 ரூபாய்க்கும், கிலோ பார் வெள்ளிக்கு 5 ஆயிரம் குறைந்து 2 லட்சத்து 75ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.