காலையிலேயே பரபரப்பு.! பாளையங்கோட்டை சிறைக்கு செல்லும் உதயநிதி.! காரணம் என்ன.?
கு. அஜ்மல்கான் July 27, 2026 12:14 PM

திமுகவினருக்கு குறி

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலில் திமுக விழ்த்தப்பட்டு தவெக அரசு பதவியேற்றுள்ளது. இந்த நிலையலில், முதலமைச்சர் விஜய்யை அவதூறாக பேசியதாக திமுகவினரை குறிவைத்து கைது செய்யப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் முன்னாள் அமைச்சரும், திருச்செந்தூர் சட்டமன்ற உறுப்பினருமான அனிதா ராதாகிருஷ்ணன் கைது செய்யப்பட்டார். ஆனால் நீதிமன்றம் ஜாமின் வழங்கியதால் விடுவிக்கப்பட்டார். அடுத்த 2 நாட்களில் விளாத்திக்குளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் முதலமைச்சர் விஜயை எலும்பை உடைப்பேன் என பேசியிருந்தார். 

திமுக எம்எல்ஏ கைது

இந்த பேச்சு சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், கடந்த வாரம் மார்க்கண்டேயன் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டார். அவரை திமுக துணை பொதுச்செயலாளரும், தூத்துக்குடி எம்பியுமான கனிமொழி சிறையில் சென்று மார்க்கண்டேயனை பார்த்தான். இந்த நிலையில் இன்று திமுக இளைஞர் அணி செயலாளரும், எதிர்கட்சி தலைவருமான உதயநிதி பாளையங்கோட்டை சிறைக்கு சென்று எம்எல்ஏ மார்க்கண்டேயனை சந்தித்து பேசவுள்ளார். 

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.