மதுரையில் மீண்டும் மாணிக்கம்தாகூர் TO வடக்கு தொகுதி MLA வார்த்தை மோதல் !
அருண் சின்னதுரை August 24, 2026 12:44 PM

விஜய் பிரதமராக வேண்டும் என்பது ரசிக மனப்பான்மை அல்ல- மக்களின் நம்பிக்கையால் சொல்கிறோம் – காங்கிரஸ் மாநில தலைவர்  மாணிக்கம்தாகூர் பேச்சுக்கு தவெக எம்எல்ஏ கல்லாணை பதில்.

சாதனை விளக்க பட்டியல் புத்தகத்தை வெளியீடு
 
மதுரை வடக்கு சட்டமன்ற தொகுதி சார்பில் தமிழக வெற்றி கழகத்தின் 100 நாள் சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் அண்ணாநகர் பகுதியில் நடைபெற்றது. இதில் மதுரை வடக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கல்லாணை கலந்து கொண்டு 100 நாட்கள் சாதனை விளக்க பட்டியல் புத்தகத்தை வெளியிட்டார்.
 
கோட்டை கொத்தளத்தில் கொடியேற்றிய நமது தலைவர் நாளை எதிர்கால இந்தியா
 
இதனை தொடரந்து பேசுகையில்.., தமிழக முதல்வராக நமது தமிழக மக்களுக்கு வழிகாட்டிக் கொண்டிருக்கும் முதலமைச்சர் நாளை இந்திய மக்களுக்கு எதிர்காலத்தில் இந்தியாவையே வழி நடத்துகிற தலைவனாக நிச்சயமாக உருவெடுப்பார். நாங்கள் ஏதோ ரசிக மனப்பான்மையிலோ அவர் மீது உள்ள பற்றிலோ சொல்லவில்லை அவரோட  திறமையில் எங்களுக்கு நம்பிக்கை இருக்கு மக்கள் மேலே நம்பிக்கை இருக்கு. கட்சி ஆரம்பிக்கும் பால்வாடி பாப்பா என சொன்னவர்கள் சொன்ன பவளவிழா பாப்பாக்கள் உங்களுக்கு பதவியே கிடையாது. என, திட்டம் போட வைத்தாரே அப்படி ஒரு தலைவன் மீது நம்பிக்கை இருக்குது.  மக்களின் அன்போடும் ஆதரவோடு கோட்டை கொத்தளத்தில் கொடியேற்றிய நமது தலைவர் நாளை எதிர்கால இந்தியா இப்படிப்பட்ட ஒரு தலைவனை எதிர்நோக்கி காத்திருக்கும் அன்று அந்த செங்கோட்டையில் ஒரு தமிழன் கொடியேற்றுகிறான் என்றால் அதை நிச்சயமாக நமது தமிழக முதலமைச்சர் தளபதி ஒருவராக தான் இருப்பார் என்றார். மற்றவர்கள் பேசினால் அது வெறும் ‘SPEECH’; விஜய் பேசினால் அது ‘REACH’. அவர் சொல்லை செயலாக மாற்றி வருகிறார்” என்றார். இதனை தொடர்ந்து தன்னை சட்டமன்ற உறுப்பினராக பதவியேற்க வைத்த தொகுதி மக்களுக்கு மேடையில் கீழ் மண்டியிட்டு வணங்கி நன்றி தெரிவித்தார்.
 
காங்கிரஸார் புலம்பி தவிக்கின்றனர்.
 
தமிழக முதலமைச்சர் விஜய் பிரதமராக வேண்டும். என அமைச்சர் கூறிய கருத்துக்கு ரசிகர் மனப்பான்மையிலயே உள்ளனர், என பதிலளித்த தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூரின் விமர்சனத்திற்கு பதிலளிக்கும் வகையில் மதுரை வடக்கு தொகுதி எம்எல்ஏ கல்லாணை, “ரசிகர் மனப்பான்மையில் விஜய் பிரதமராக வருவார் என்று நாங்கள் கூறவில்லை” என பதில் அளித்தார். கடந்த திமுக ஆட்சியின் போது மதுரை வடக்கு தொகுதி எம்எல்ஏவுக்கும் காங்கிரஸ் எம்பி மாணிக்கம்தாகூருக்கும் இடையே வார்த்தை மோதல் இருந்துவந்த நிலையில் தற்போது தவெக ஆட்சியிலும் மதுரை வடக்கு தொகுதி எம்எல்ஏவுக்கும் மாணிக்கம்தாகூருக்கும் இடையே மீண்டும் வார்த்தை போர் தொடங்கியுள்ளது. மாணிக்கம்தாகூருக்கும் வடக்கு தொகுதிக்கு ஏதோ ஒரு பிரச்னை இருக்குது போல" - என காங்கிரஸார் புலம்பி தவிக்கின்றனர்.
© Copyright @2026 LIDEA. All Rights Reserved.