சுற்றுலா மையம் ஆகுமா இயற்கை எழில் கொஞ்சும் அருவிக்கரை?
GH News July 20, 2024 09:10 PM

நாகர்கோவில்: திருவட்டாறு அருகே இயற்கை எழில் கொஞ்சும் அருவிக்கரை பகுதியைச் சுற்றுலா தலமாக மேம்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து ள்ளனர்.

கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டாறில் இருந்து அரை கிலோ மீட்டர் தொலைவில் அருவிக்கரை உள்ளது. பெருஞ்சாணி அணையிலிருந்து பரளியாற்றில் வெளியேறும் தண்ணீர், பரந்து விரிந்த பாறைகளின் வழியே பாயும் பகுதியே அருவிக்கரை எனப்படுகிறது.

அருவிக்கரையின் மேல்பகுதியில் தடுப்பணை கட்டப்பட்டு, இடது மற்றும் வலது கரைக்கால்வாய் மூலமாக விவசாயத்துக்கு தண்ணீர் கொண்டு செல்லப்படுகிறது. ஏற்ற இறக்கம் நிறைந்த பாறைகளினூடே பரளியாற்றுத் தண்ணீர் பரிந்து விரிந்து பாய்வதைக் காணும் போதே, மனதை சிலிர்க்க வைக்கிறது.

பரளியாறு சில இடங்களில் 10 அடி ஆழம், மற்றும் 15 அடி ஆழம் கொண்டதாக உள்ளது. ஆற்றையொட்டியுள்ள சப்தமாதர் கோயில் அருகே நெடும்போக்கு கயம் என்ற பகுதி உள்ளது. பெயருக்கு ஏற்றார் போல் இப்பகுதி ஆழம் மிகுந்த பகுதியாகும். சப்தமாதர் கோயில் எதிரில் அருவிக்கரை அருவி உள்ளது. அருவியின் ஒரு ஓரத்தில் கடவுள்களின் சிற்பங்கள் பாறைகளில் செதுக்கப்பட்டுள்ளன.

© Copyright @2024 LIDEA. All Rights Reserved.