தர்மபுரி மாவட்டம் பென்னாகரத்தில் பூமி பூஜை விழாவில் பாமக - திமுக ஆதரவாளர்களிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
பென்னாகரம் பேருந்து நிலையத்தின் நுழைவாயிலில் நிழற் குடை அமைப்பதற்காக நடந்த பூமி பூஜை நிகழ்ச்சியில் திமுகவினரால் இந்த குழப்பம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிழற்குடை அமைப்பதற்கு பாட்டாளி மக்கள் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து நிதி ஒதுக்கப்பட்டதாக தெரிகிறது.
ஆனால், பூமி பூஜை நிகழ்ச்சிக்கு திமுக எம்பி மணி வருவதாக தெரிவித்ததால், பாட்டாளி மக்கள் கட்சியினர் கடும் கொந்தளிப்புடன் நிகழ்ச்சி நடக்கும் இடத்தில் குவிந்தனர்.
இதனால் திமுக பாமக திமுக ஆதரவாளர்களிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.