Srilanka Election Live: `இலங்கை வரலாற்றை மாற்றி எழுதத் தயாராக நிற்கிறோம்!' - அனுர குமார திசநாயக்க
Vikatan September 23, 2024 12:48 AM
இலங்கை அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று (21-09-2024) மாலை 4 மணியுடன் நிறைவடைந்தது. இன்று வாக்கு எண்ணிக்கை தொடங்கி நடைபெற்று வருகிறது. மதியத்துக்குள் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு, இலங்கையின் புதிய அதிபர் யார் என்பது அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவுள்ளது. இலங்கை அதிபர் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை, புதிய அதிபர் யார் என்பது குறித்த நிலவரங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள விகடனுடன் இணைந்திருங்கள்...!

அநுர குமார திஷநாயக - 39.68 %

சஜித் பிரேமதாசா - 34.20 %

ரணில் விக்ரமசிங்கே - 17.50%

அரியநேந்திரன் - 2.83 %

நிமல் ராஜபக்சே - 2.42 %

`இலங்கை வரலாற்றை மாற்றி எழுதத் தயாராக நிற்கிறோம்!' - அனுர குமார திசநாயக்க

``பல நூற்றாண்டுகளாக நாம் வளர்த்து வந்த கனவு இறுதியாக நனவாகிறது. இந்தச் சாதனை எந்த ஒரு தனிநபரின் உழைப்பின் விளைவு அல்ல, ஆனால் நூறாயிரக்கணக்கானோரின் கூட்டு முயற்சி. உங்கள் அர்ப்பணிப்பு எங்களை இவ்வளவு தூரம் கொண்டு வந்துள்ளது, அதற்காக நான் மிகவும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். இந்த வெற்றி நம் அனைவருக்கும் சொந்தமானது.

இந்த நோக்கத்திற்காக தங்கள் வியர்வையையும், கண்ணீரையும், தங்கள் வாழ்க்கையையும்கூட அர்ப்பணித்த பலரின் தியாகத்தால் எங்கள் பயணம் செதுக்கப்பட்டுள்ளது. அவர்களின் தியாகங்கள் மறக்கப்படவில்லை. அவர்களின் நம்பிக்கைகள் மற்றும் போராட்டங்களின் செங்கோலை நாங்கள் தாங்குகிறோம், அது சுமக்கும் பொறுப்பை அறிந்தே. நம்பிக்கையினாலும் எதிர்பார்ப்பினாலும் நிரம்பிய கோடிக்கணக்கான கண்கள் எம்மை முன்னோக்கித் தள்ளுகின்றன, ஒன்றிணைந்து இலங்கை வரலாற்றை மாற்றி எழுதத் தயாராக நிற்கிறோம்.

இந்த கனவை புதிய தொடக்கத்தில் மட்டுமே நனவாக்க முடியும். சிங்களவர்கள், தமிழர்கள், முஸ்லிம்கள் மற்றும் அனைத்து இலங்கையர்களின் ஒற்றுமையே இந்தப் புதிய தொடக்கத்தின் அடித்தளமாகும். நாம் தேடும் புதிய மறுமலர்ச்சி இந்த பகிரப்பட்ட வலிமை மற்றும் பார்வையிலிருந்து எழும்.

நாம் ஒன்றாக இணைந்து இந்த எதிர்காலத்தை வடிவமைப்போம்!" என, அனுர குமார திசநாயக்க தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்.

இலங்கை அதிபராகிறார் அனுர குமார திசநாயக்க! இலங்கை அதிபராகிறார் அனுர குமார திசநாயக்க! அனுரகுமார திசநாயக்க

இலங்கையின் அதிபராகிறார் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுர குமார திசநாயக்க. நாளை காலை அதிகபாராகப் பதவியேற்கிறார்.

விருப்ப வாக்கு எண்ணிக்கை

எந்த வேட்பாளரும் 50% வாக்குகளைப் பெறாததால் ‘விருப்ப வாக்கு' எண்ணிக்கை நடைபெற உள்ளது. தேர்தலில் முதல் விருப்பம், இரண்டாம் விருப்பம், 3ஆம் விருப்பம் என்ற அடிப்படையில் வாக்காளர்கள் வாக்களித்துள்ளனர். 50% க்கும் அதிகமான வாக்குகளைப் பெறும் வேட்பாளர் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றியாளராகத் தேர்ந்தெடுக்கப்படுவார்.

இலங்கை அரசியல் வரலாற்றில் முதன் முறையாக இந்த ஜனாதிபதி தேர்தலில் யாருக்கும் 50 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகள் கிடைக்கவில்லை. அநுர குமார திஸநாயக்க மற்றும் சஜித் பிரேமதாச ஆகிய இருவரும் அதிக வாக்குகளைப் பெற்று, முதலிரு இடங்களில் பிடித்துள்ளனர்.

இனி, அனுர குமார திஸநாயக்க மற்றும் சஜித் பிரேமதாச ஆகிய இருவரும் பெற்ற விருப்ப வாக்குகள் எண்ணப்படும்.

சுண்டு விரலால் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்திய இலங்கை மக்கள்! புதிய அதிபராகிறாரா அநுர குமார திஸாநாயக்க? வெறிச்சோடி கிடக்கும் இலங்கை வீதிகள்

இலங்கையில் நேற்று அதிபர் தேர்தல் நடந்து முடிந்த நிலையில், வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நாளான இன்று ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் எப்போதும் பரபரப்பாக இயங்கும் இலங்கையின் முக்கிய சாலைகளில் ஒன்றான கால் ஃபேஸ் (Galle face) சாலை தற்போது போக்குவரத்து ஏதுமில்லாமல் ஆள் அரவமற்றிருக்கிறது.

இலங்கை: கால் ஃபேஸ் (Galle face) சாலை இலங்கை: கால் ஃபேஸ் (Galle face) சாலை இலங்கை: கால் ஃபேஸ் (Galle face) சாலை இலங்கை: கால் ஃபேஸ் (Galle face) சாலை

இலங்கை அதிபர் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார் தேசிய மக்கள் சக்தி வேட்பாளர் அநுர குமார திஷநாயக. இருப்பினும், அவரின் வாக்கு 50 சதவிகிதத்திலிருந்து குறைந்து கொண்டே வருகிறது. தற்போது அநுர குமார திஷநாயக 44.43 சதவிகித வாக்குகளைப் பெற்றிருக்கிறார். இலங்கை தேர்தல் விதிப்படி ஒருவர் அதிபராக வேண்டுமென்றால் 50 சதவிகித வாக்குகளுக்கும் அதிகமாக பெற்றிருக்க வேண்டும். இறுதிச் சுற்று வரை அநுர குமார திஷநாயக 50 சதவிகிதத்தைத் தொடவில்லை என்றால் 'Instant Runof Method' முறைப்படி இரண்டாவது முன்னுரிமை வாக்குகள் எண்ணப்படும்.

அநுர குமார திஷநாயக - 44.43 %

சஜித் பிரேமதாசா - 31.2 %

ரணில் விக்ரமசிங்கே - 15.19%

அரியநேந்திரன் - 4.6 %

அநுர குமார திஷநாயக முன்னிலை:

தேசிய மக்கள் கட்சியின் வேட்பாளரான அநுர குமார திஷநாயக இதுவரை 51.81 விழுக்காடுகளுக்கும் மேலான வாக்குகள் பெற்று தொடர்ந்து முன்னிலையில் இருந்து வருகிறார். ரணில் விக்ரமசிங்கே, சஜித் பிரேமதாசா ஆகியோர் பின்னடைவைச் சந்தித்து வருகின்றனர். தமிழ் அமைப்புகள் சார்பில் பொதுவேட்பாளராகப் போட்டியிட்ட அரியநேந்திரன் 4வது இடத்தில் இருக்கிறார். 5வது இடத்திற்குத் தள்ளப்பட்டிருக்கிறார் முன்னாள் அதிபர் ராஜபக்சவின் மகன் நமல் ராஜபக்ச. இந்நிலையில் அநுர குமார திஷநாயகவிற்கு அதிபராகும் வாய்ப்புகள் அதிகமிருக்கின்றன. மூத்த தலைவர்கள் பலரும் அநுர குமார திஷநாயகவிற்கு வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர்.

அநுர குமார திஷநாயக - 51.81%

சஜித் பிரேமதாசா - 21.73%

ரணில் விக்ரமசிங்கே - 19.42%

இலங்கை அதிபர் தேர்தல் வரலாற்றிலேயே மிக அதிகமான வேட்பாளர்கள் (38 வேட்பாளர்கள் களத்தில்) போட்டியிடும் தேர்தலாக விளங்கும் இந்த 2024 அதிபர் தேர்தல் பார்க்கப்படுகிறது. இலங்கையின் புதிய அதிபர் யார் என்ற எதிர்பார்ப்பு எகிறிக்கொண்டிருக்கிறது. இந்தத் தேர்தலில், தற்போதைய இடைக்கால அதிபராக இருக்கும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கே, ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும் சஜித் பிரேமதாசா, இடதுசாரி சிங்கள இனவாத கட்சியான ஜனதா விமுக்தி பெரமுன(ஜே.வி.பி) சார்பில் அனுரகுமார திசநாயக்க, ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் சார்பில் மகிந்த ராஜபக்சேவின் மகனான நிமல் ராஜபக்சே, விடுதலைப் புலிகளுக்கு எதிரான இறுதிப் போரின்போது இலங்கையின் ராணுவத் தளபதியாக செயல்பட்ட சரத் பொன்சேகா, மக்கள் போராட்டக் கூட்டணி சார்பில் வழக்கறிஞர் நுவான் போபகே உள்ளிட்ட முன்னணி தலைவர்கள் போட்டியிடுகின்றனர். இருப்பினும் ரணில் விக்ரமசிங்கே, சஜித் பிரேமதாசா, அனுரகுமார திசநாயக்க ஆகிய மூவருக்குள்தான் மும்முனை போட்டி நிலவுகிறது.

© Copyright @2024 LIDEA. All Rights Reserved.