பொதுவாக சுகர் வந்த பின்னர் அவஸ்தை படுவதை விட அது வரும் முன் காப்பதே சிறந்த வழியாகும் .இதை எவ்வழியில் தடுக்கலாம் என்று இப்பதிவில் நாம் காணலாம் .
1.அதிக கொழுப்புள்ள உணவுகளை உண்பது ,உடலுழைப்பு இல்லாமல் இருப்பது ,உடல் பருமனாய் இருப்பது ,மன அழுத்தம் போன்றவை சுகருக்கு முக்கிய காரணம் .மேலும் பரம்பரையும் இந்த சுகருக்கு ஒரு காரணமாக கூறப்படுகிறது .
2.அதனால் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தவில்லை என்றால், அவை இதய நோய், பக்கவாதம், சிறுநீரக நோய், குருட்டுத்தன்மை மற்றும் உறுப்பு துண்டித்தல் போன்ற கடுமையான உடல்நலப் பிரச்சினைகளை ஏற்படுத்தும்
3.சர்க்கரையை உடலில் அதிகரிக்கும் உணவுகள் என வரும் போது அதை எவ்வளவு சாப்பிடுகிறோம் என்பதை கவனிக்க வேண்டியது அவசியம், அதை கட்டுப்பாடுடன் சாப்பிட முயற்சியுங்கள்.
4.சர்க்கரை பானங்களைத் தவிர்க்கவும். சோடாக்கள் மற்றும் பழச்சாறுகள் போன்ற பானங்களில் அதிக அளவு சர்க்கரை இருக்கும்,
5. நீங்கள் கார்போ உணவுகளை அதிகமாக உண்ணும்போது இரத்தத்தில் குளுக்கோஸ் அளவு உயர்கிறது.
6.அமெரிக்க நீரிழிவு சங்கத்தின் பரிந்துரையின்படி, கார்போக்களை கணக்கிடுதல் அல்லது உணவு பரிமாற்ற முறையைப் பயன்படுத்துவதன் மூலம் கார்போ அளவை கட்டுப்படுத்த முடியும்.