பீகார் மாநிலம் பக்ஸா மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு பெண் தனது 8 வயது வளர்ப்பு மகளுடன் அந்தப் பகுதியில் வசித்து வந்தார். இந்நிலையில், நேற்று இரவு சிறுமி காணாமல் போனார். இதனால், சிறுமியின் குடும்பத்தினர் நேற்று இரவு தும்ரான் போலீசில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில், போலீசார் தேடுதல் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர்.
இந்நிலையில், இன்று, சிறுமியின் வளர்ப்பு தாய் சித்தியின் வீட்டில் போலீசார் சந்தேகத்தின் பேரில் சோதனை நடத்தினர். இந்த தேடுதலின் போது, அவரது அறையில் ஒரு மர்மமான பெட்டியைக் கண்டுபிடித்தனர். அதைத் திறந்தபோது, அதில் ஒரு சாக்குப்பை இருந்தது, அதைப் பார்த்து போலீசார் அதிர்ச்சியடைந்தனர். காணாமல் போன சிறுமியின் உடல் கருகிய நிலையில் இருந்தது.
பின்னர், உடலை பிரேத பரிசோதனைக்காக அருகிலுள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, சிறுமியின் வளர்ப்பு தாயாரை போலீசார் கைது செய்தனர். பின்னர், விசாரணையில், சிறுமியின் வளர்ப்பு தாய் சிறுமியை கழுத்தை நெரித்து கொன்று, உடலை நெருப்பில் எரித்து, ஒரு சாக்கில் வைத்து, ஒரு பெட்டியில் மறைத்து வைத்தது தெரியவந்தது. இந்தக் கொலைக்கான காரணம் குறித்து அந்தப் பெண்ணிடம் போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.