நாளை இந்தியா-ஜப்பான் கூட்டு ராணுவப் பயிற்சி தொடக்கம்!
Dinamaalai February 23, 2025 06:48 PM


இந்தியா-ஜப்பான் கூட்டு ராணுவப்  'தா்மா காா்டியன்', இந்தியாவிலும் ஜப்பானிலும் மாறி மாறி ஒவ்வொரு வருடமும் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில்  கடந்த ஆண்டு, பிப்ரவரி-மாா்ச் மாதத்தில் ராஜஸ்தானில் இந்நிகழ்வு நடந்தது. நடப்பு ஆண்டு கூட்டு ராணுவப் பயிற்சியின் 6வது பதிப்பு ஜப்பானின் கிழக்கு ஃபுஜி ராணுவப் பயிற்சி மையத்தில் பிப்ரவரி 24ம் தேதி முதல் மாா்ச் 9ம் தேதிவரை நடைபெற உள்ளது.

இதையொட்டி, பெரும்பான்மையாக 'மெட்ராஸ்' படைப்பிரிவைச் சோ்ந்த இந்திய ராணுவ வீரா்கள் 120 போ் அடங்கிய குழு ஜப்பான் நாட்டுக்கு சனிக்கிழமை புறப்பட்டு சென்றது. ஜப்பான் சாா்பில் அந்நாட்டின் தரை பாதுகாப்புப் படை இந்தப் பயிற்சியில் கலந்து கொள்கிறது.இதுகுறித்து பாதுகாப்பு அமைச்சகம், 'பிராந்திய பாதுகாப்பு, அமைதி மற்றும் ஸ்திரத்தன்மைக்கான இந்தியா மற்றும் ஜப்பானின் பகிரப்பட்ட அா்ப்பணிப்பை இந்த ராணுவப் பயிற்சி அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. 

மேலும், சுதந்திரமான மற்றும் அனைத்து தரப்பையும் உள்ளடக்கிய இந்திய-பசிபிக் பிராந்தியம் என்ற இருநாட்டு பரஸ்பர நோக்கத்துக்கு இப்பயிற்சி வலுச்சோ்க்கும்' என தெரிவித்துள்ளது.படைகளின் செயல்பாட்டு மற்றும் போா்த்திறன்களை மேம்படுத்தவும், பயனுள்ள கூட்டு நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பை வலுப்படுத்தவும் வடிவமைக்கப்பட்டுள்ள இப்பயிற்சியில் உடல் தகுதி, கூட்டு திட்டமிடல் இவைகளில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

 

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.