திருச்சி மாவட்டம் மேல சிந்தாமணி பகுதியைச் சேர்ந்தவர் செந்தில்குமார்(41). இவருக்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் இரண்டு பிள்ளைகள் உள்ளனர். இந்த நிலையில் குடும்ப பிரச்சனை காரணமாக செந்தில்குமார் கடந்த 8 ஆண்டுகளாக தனது மனைவி மற்றும் பிள்ளைகளை பிரிந்து தனியாக வசித்து வந்தார். கடந்த 15-ஆம் தேதி மன உளைச்சலில் இருந்த செந்தில்குமார் தனது வீட்டில் திடிரென விஷம் குடித்து மயங்கி கிடந்தார்.
இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் செந்தில்குமாரை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் செந்தில்குமார் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.