பெட்ரோல் வாங்கி சென்ற நண்பர்கள்…. தீ விபத்தில் சிக்கி துடிதுடித்து இறந்த வாலிபர்…. பரபரப்பு சம்பவம்….!!
SeithiSolai Tamil March 28, 2025 04:48 AM

திண்டுக்கல் மாவட்டம் கொரசினம்பட்டியை சேர்ந்த பத்மநாபன் (18) மற்றும் அவரது 17 வயது நண்பர், டூவீலரில் கோபால்பட்டி சென்று பிளாஸ்டிக் கேனில் பெட்ரோல் வாங்கி ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தனர். இந்த நிலையில், நத்தம் சாலையில் கணவாய்பட்டி பங்களா அருகே வந்தபோது, சாலையை குறுக்கே கடந்த ஒரு சிறுவன் எதிர்பாராதவிதமாக டூவீலரில் மோதினார்.

இதில் பத்மநாபனின் டூவீலர் தலைக்குப்புற விழுந்தது. இந்த நேரத்தில் சிறுவனின் கையில் இருந்த பெட்ரோல் கேன் கீழே விழுந்து, மின்னல் வேகத்தில் தீப்பற்றி, டூவீலரும் அதில் இருந்த இருவரும் தீக்கிரையாகி விட்டனர்.

அதனை பார்த்த அருகில் இருந்தவர்கள் உடனடியாக ஓடி வந்து இருவரையும் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே பத்மநாபன் உயிரிழந்தார். தீக்காயமடைந்த 17 வயது சிறுவன் தற்போது திண்டுக்கல்லில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த துயர சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.