ரேஷன் அட்டைதாரர்களே…!! “நாளை கடைசி நாள்”… இந்த வேலையை முடிக்கலனா இனி ரேஷன் கார்டுகள் செல்லாது… மத்திய அரசு அதிரடி..!!
SeithiSolai Tamil March 30, 2025 01:48 PM

நாடு முழுவதும் ரேஷன் கார்டுகள் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு அரிசி மற்றும் பருப்பு உள்ளிட்ட அத்யாவசியமான பொருட்கள் மலிவு விலையில் வழங்கப்பட்டு வருகிறது. அதோடு மத்திய மற்றும் மாநில அரசின் பல்வேறு திட்டங்களுக்கும் ரேஷன் கார்டுகள் ஒரு முக்கிய ஆவணம். இந்நிலையில் ரேஷன் கார்டுகளில் இகேஒய்சி சரிபார்ப்பை முடிக்க வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

ஒருவேளை குறிப்பிட்ட நேரத்திற்குள் இகேஒய்சி சரிபார்ப்பை முடிக்காவிடில் அந்த கார்டுகள் ரத்து செய்யப்படும். தமிழ்நாட்டில் மட்டுமே இதுவரை 72 லட்சம் ரேஷன் அட்டைதாரர்கள் இகேஒய்சி சரிபார்ப்பை முடிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதற்கான கால அவகாசம் மார்ச் 31 ஆகும். எனவே நாளை கடைசி நாள் என்பதால் இகேஒய்சி சரிபார்ப்பை முடிப்பது எப்படி என்பது குறித்து பார்ப்போம்.

நீங்கள் ஆன்லைன் சென்டரில் சென்றும் செயல்பாட்டை முடித்துக் கொள்ளலாம் அல்லது வீட்டில் இருந்து முடித்துக் கொள்ளலாம். அதற்கு முதலில் உங்கள் மாநிலத்தின் உணவுத்துறை அல்லது ரேஷன் கார்டு சேவையின் அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்திற்குள் செல்ல வேண்டும். அதில் இகேஒய்சி இணைப்பை காணலாம். அதில் ரேஷன் கார்டில் உள்ள பதிவு எண் மற்றும் மொபைல் நம்பரை பதிவிட்டு உள்ளே நுழைய வேண்டும். பின்னர் நீங்கள் பதிவு செய்திருந்த மொபைல் நம்பருக்கு ஓடிபி நம்பர் வரும் நிலையில் அதனை பதிவிட வேண்டும்.

பின்னர் ஆதார் நம்பரை பதிவிட்டு ரேஷன் கார்டுடன் இணைத்துவிட்டு ஆதார் மற்றும் ரேஷன் இரண்டிலும் உங்கள் பெயர் உள்ளிட்ட விவரங்கள் சரியான முறையில் இருக்கிறதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். அது ஆதாருடன் இணைந்த பிறகு கைரேகை அல்லது ஓடிபி விவரங்களை சரிபார்த்துக் கொள்ள வேண்டும். அதன்பின் இகேஒய்சி சரிபார்ப்பு முடிந்து விடும். ஒருவேளை இது செய்ய முடியாவிடில் அருகில் உள்ள பொது சேவை மையம் அல்லது ரேஷன் கடைகளுக்கும் சென்று இந்த செயல்பாட்டினை முடிக்கலாம். மேலும் இதனை செய்யவிடில் ரேஷன் கார்டுகள் பட்டியலில் இருந்து நீக்கப்படுவதோடு அது ரத்தாகவும் அதிக வாய்ப்புகள் இருக்கிறது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.